Monday 28 November 2011

nanbendaa...

                                                           நண்பன்...


             *என் மரியாதைக்குரியவன்...


             *என்னிடம் மரியாதையை எதிர்பார்க்காதவன்...


             *எனக்கு இரண்டாம் ரசிகன்...
                ஆனால் முதல் விமர்சகன்...




             *என்னிடமிருந்து என்னாலும்
                 பிரிக்க முடியாத என்னுடைய 
                  மிக முக்கியமான அசையும் சொத்து...


             *என்னிடம் மட்டுமல்ல...
                 என்னைப்பற்றியும் அதிகம் பேசுபவன்...


             *என் உணர்சிகளுக்கும் உண்மைக்கும் 
                 உறங்காது தோள் கொடுப்பவன்...


             *என் பலமானவன்...
                 என்னுள் பலவீனமானவன்...


             *என் காதலியைவிட நிறைகளையும் 
                  மனைவியைவிட குறைகளையும் அறிந்தவன்...


             *நண்பா! பழகிய காதலுக்காக  கவிதைகளும் கல்லறைகளும் பேசலாம்..
                  காதலுக்காக உயிரையும் இழக்கலாம் என்று...
      
              *ஆனால் பார்க்காத நண்பனுக்காக வடக்கிருந்து 
                     உயிர் விட்ட இலக்கியமே சொல்கிறது...


                * ஒரு உண்மையான நட்பிற்காக 
                         எந்த காதலையும் இழக்கலாம் என்று...


  

Monday 7 November 2011

ithu kavithaialla


                                                இது க(வி)தையல்ல...

*எத்தனை நாள் மறைக்க முடியும்...
      உன்னையும் உன்னுள்
   ஒளிந்திருக்கும் என்னையும்...



 *இப்பொழுது வேண்டுமானால் நீ 
       என்னை மறந்துவிட்டதாய் 
           நடித்துகொண்டிருக்கலாம்...
            ஆனாலும் நீ என்னை 
                  நினைப்பதே இல்லையென
                     நிச்சயமாய் என் கண் பார்த்து
  உன்னால் சொல்ல முடியுமா?...


*எத்தனையோ நாட்கள் உன்
     வார்த்தைகளால் நான்
         கண்ணீரில் நனைந்து இருக்கிறேன்...
           ஆனாலும் இன்றுவரையில் நீ 
               ஏற்படுத்திய காயங்களே 
  எனக்கு மருந்துதான்..  




*என்னுடைய உணர்வுகளை நீ 
    எத்தனையோ முறை 
       உதாசீனப்படுத்தி இருக்கிறாய்...
  அதனால்தான் 
    என்னால் இன்று மற்றவர்களின் 
       உணர்வுகளை படிக்க முடிகிறது...
         என்னின் உணர்ச்சியையும் 
            உயிரோடு என்னால் 
  உறங்க வைக்க முடிகிறது...

*கடைசி வரையில் நீ 
     என்னை சரியாகவே புரிந்து கொள்ளவில்லை...
  அதனால்தான் என்னால் 
     இன்று எல்லோரையுமே 
  சரியாய் புரிந்து கொள்ள முடிகிறது...

*இன்றுவரையில் எனக்கு 
     உன் மீது கோபமே இல்லை...
  ஆனாலும் நான் உனக்கு கடமைப்பட்டிருக்கிறேன்...

*நேசிப்பது பலவீனம் 
       மற்றவர்களால் நேசிக்கபடுவதுதான்
          பலமென்று நீதான் எனக்கு 
  உணரவைத்தாய்...




*நீ என்மீது செலுத்திய 
     அந்த வெறுப்புகள்தான் 
        இன்று எல்லோருமே 
  என்னை நேசிக்க காரணம்...
  உன் வெறுப்புகள்தான் 
     என்னை மற்றவர்கள் எப்போதுமே      
        நேசிக்க வேண்டும் 
  என்று பாடம் கற்றுதந்தது...

*நீ வேண்டுமானால் 
     நினைத்துக்கொண்டிருக்கலாம்...
        நம்முள் யுத்தம் முடியும் ஒவ்வொரு 
           வேளையிலும் நானே விட்டுகொடுப்பதால் 
  தோற்றுப்போய்விட்டேனென்று...
  ஆனாலும் தோற்றது மட்டும்தான் நான்...
     ஒவ்வொரு முறையும் 
        நீதான் என்னால் 
  தோற்கடிக்கபட்டிருக்கிறாய்...




*நான் உன்னிடம் 
    இழந்ததென்னவோ என் 
       பிடிவாதத்தை மட்டும்தான்...
  ஆனால் நீ உன் பிடிவாதத்தால் 
  என்னை அல்லவா இழந்துவிட்டாய்...

*நான் உன்னோடு மட்டுமே 
    கனவுகளை 
      வளர்த்துக்கொண்டு உன்னை 
         நேசிக்கவில்லை...
  உன்னைப்பற்றியும் என்னுள் 
  கனவுகள் ஏராளம் உண்டு...

*உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்
     உன்னிடம் ஜெயிக்க 
       என்றுமே ஆசைப்பட்டதில்லை...
  ஆனால் உன் வாழ்க்கையில்
     என்றாவது ஒருநாள் 
         என் அன்பை 
             இழந்து போனதற்காக 
  நிச்சயம் அழுவாய்...
  அன்று உன்னை நான் கண்டிப்பாய் ஜெயிப்பேன் ...         

  

Sunday 6 November 2011

ematram

                                                      (ஏ)மாற்றம்...

*கால் நூற்றாண்டுக்கு முன்னால் 
  கலவரத்தில் ஓடிப்போன நான் 
   நேற்றுதான் ஊருக்கு திரும்பினேன்...

*ஊராட்சி நகராட்சியாய்
  இனிதாய் வரவேற்றது...

*ஒத்தையடி பாதையில் இன்று 
  ஓராயிரம் வாகனங்கள்...

*மண் குடிசை இடத்திலெல்லாம் 
  மாடமாளிகைகள்...

*நடந்து சென்ற இடதிற்கும்கூட இன்று 
  நகர பேருந்துகள்...

*அதிசயமாய் ஆங்காங்கே சில 
  வேட்டி சேலைகள்...

*கட்டிடங்களுக்கு போட்டியாய்
  நிறைய கட்சி கம்பங்கள்...

*கலையை வளர்க்கவும் 
  கண்காட்சிக்கூடங்கள்...

*புன்னகையாய் பூக்களின் பூங்கா...

*அரங்கமெல்லாம் ஆரவாரமாய்
   அரசியல் வசனங்கள்...

*இரவையும் பகலாய் மாற்ற
  தெரு விளக்குகள்...

*துவக்கப்பள்ளி வளர்ந்து 
  மகளிர் கல்லூரி...

*இளமையோடு வெள்ளம் 
  இல்லாமல் நடைபோடும் ஆறு...

*மனமெல்லாம் பூரிப்பு...
  மாறிப்போன ஊரைப் பார்த்து ...

*மறுநாள் மூலைச்சிலைக்கு 
  சிறிதாய் மூக்குடைந்து போனதால் 
  எரிக்கப்பட்டன ஏழெட்டு கடைகள் ...

*துப்பாக்கி குண்டுக்கு பலியாகிப்போயின...
  சில அப்பாவி  உயிர்கள்...

Saturday 5 November 2011

kathalenbathu...

                                                      காதலென்பது...

                                   *என்னுள் விழுந்த மின்னல் நீ...
                                     என்றும் மழையை தந்ததில்லை...
                                              அந்த மழையில் ஒருநாளும்
                                               நான் நனைந்ததில்லை...

                                    *நீயொரு தென்றல்தான்..
                                     ஆனால் எந்நாளும் நீ 
                                     தாலாட்டாய் வீசியதில்லை...
                                               அத்தாலாட்டில் ஒரு நாளும்
                                               கண்மூடி நான் உறங்கியதில்லை...

                                     *நீயொரு மரபு மீறாத 
                                       புதுக்கவிதை...
                                             இந்த கவிதையின்
                                             பொருள்தான் இன்றுவரை 
                                             எனக்குப் புரியவில்லை...

                                    *உன் முகம் 
                                      அழகான ஓவியம்தான்...
                                            இந்த ஓவியம் காட்டும்
                                            உணர்ச்சியைதான்
                                           இன்றுவரையில் என்னால் 
                                           படிக்கவே முடியவில்லை...

                                   *நீயொரு வாசம் வீசும் 
                                     வாடாத மலர்...
                                          எனக்குதான் இதுவரையில் 
                                          வாசம் தந்ததேயில்லை...

                                   *உன் பேச்சு இனிமையான 
                                     சங்கீதம்தான்...
                                         என் இதயத்தின் ஓசையை 
                                        அது ஒருநாளும் 
                                        பிரதிபலித்ததில்லை...

                                  *உன் இதயத்துடிப்பின் 
                                    ஓசையில் என் எண்ண அலைகள் 
                                    எப்பொழுதுமே வெளிப்பட்டதேயில்லை...

                                  *உன் கண்கள் பேசிய 
                                   அந்த மௌன மொழியை
                                   கடைசிவரையிலும் 
                                   என்னால் கண்டுபிடிக்கவே 
                                   முடியவில்லை...
            
                                  *ஆயினும் 
                                     மன்னித்துவிடு என்னை...
                                    உன்னை வெறுக்கத் தெரியவில்லை...

                                  *இன்றுவரையில் 
                                    நாம் பழகிய நாட்களை 
                                    நான் மறக்கவும் பழகவில்லை...


nimmathi...

                                                                        நிம்மதி...

*இரவு ஊடலினால் உறங்காமல் கண் எரிச்சல்...

*காலையில் விழித்ததென்னவோ

   கடன் கொடுத்தவன் முகத்தில்...

*உதட்டோடு  உபசரிப்பு...

*உப்பில்லாத உப்புமா...

*பேருந்து பயணத்தில் வெடிகுண்டு பீதி...

*மறந்து போன பைலுக்கு மறக்க கூடாத வசவுகள்...

*மதிய நேரத்து மரத்தடி கிசுகிசுக்கள்...

*மாலை நேரத்துச் செலவுக்கு காலியாகிப்போன மணிபர்ஸ்...

*மனபாரம் நீங்க தெய்வம் முன் நிற்கும் போது
மனதின் மூலையில் மறுபடி மறுபடிகேள்வியாய் அரிக்கும்...
வாசலிலே அனாதையாய் விட்டிருக்கும் 
காவல் இல்லாத மிதியடி...

Monday 10 October 2011

vaimai enapaduvathu yathenil...

                                    வாய்மை எனப்படுவது யாதெனில்...

*சில்லறை கொடுக்க மட்டுமே 
        மறந்து போகும் நடத்துனர்...

*காலையில் மறந்து போக 
       இரவில் கணவன் செய்யும் சத்தியம்...

*மனைவி மறைக்கும் 
      கருப்பு பண கணக்குகள்...

*கல்லூரி கட்டணம் உயர்த்தி 
      திரைப்படம் பார்க்கும் மகன்...

*அலுவலக விடுப்பில் அடிக்கடி 
      இறந்து போகும் இல்லாத பாட்டி...

*தர்மம் கேட்கும் போது 
      மட்டுமே தட்டுப்படாத சில்லறை...

*கடன் கேட்கும் போது 
      மட்டுமே காலியாகத் தோன்றும் மணிபர்ஸ்...

*அரசியல்வாதியின் 
      தேர்தல் நேர வாக்குறுதிகள்...

*தேர்தல் நேர 
      திடீர் கூட்டணிகள்...

*பேரணிக்காக காட்டப்படும்
       மக்களின் எண்ணிக்கை...

*மாநாட்டில் வசூலிக்கப்படும் 
      கட்சி நிதி கணக்கு...

*பதிவானதாக காட்டப்படும் 
      இறந்து போனவரின் வாக்கு...

*திருமணத்திற்கு முன் காதலியைப் 
      பற்றிய காதலனின் வர்ணனைகள்...

*ஜவுளிக்கடையில் வழங்கப்படும் 
      தள்ளுபடி விற்பனை...

*சிகரெட் பெட்டியின்
      எச்சரிக்கை வாசகம்...

*நிதி நிறுவனங்களின் 
      கவர்ச்சி வட்டி விகிதம்...

*குடும்ப அட்டையில் உள்ள 
       உறுப்பினர்களின் எண்ணிக்கை...

*ரேஷன் கடைகளில் 
       வழங்கப்படும் பொருளின் நிறை...

*தொலைக்காட்சி விளம்பரங்களின் 
       பளீர் வெண்மை...

*வருமான அதிகாரிகள் 
       வரும்போது மட்டுமே வரும் திடீர் நெஞ்சு வலி...

*ஆட்டோ மீட்டர் காட்டும்
       சரியான கட்டணம்...

*தெரிந்தவரைப் பார்த்தவுடன் 
       பேருந்தில் வரும் திடீர் உறக்கம்...

*எப்பொழுதுமே ஏறாமல் 
       இருக்கும் நடிகையின் வயது...






Sunday 2 October 2011

mangaiyarai pirapatharke



                                              மங்கையராய்ப்  பிறப்பதற்கே...


  கரு முதல் கல்லறை வரை...
*கருவாய் இருக்கும்போதே காட்டிக்கொடுக்கப்பட்டால்
       நீ கலைக்கப்படலாம்...

*தவறிப்  பிறந்தாலும் தாய்ப்பாலாய் உனக்கு 
       கள்ளிப்பால் கொடுக்கப்படலாம்...

*உயிரை பறிக்க உணவாய் உனக்கு
        நெல்மணி தரப்படலாம்...


*உறவை முடித்து வைக்க சிலநேரம் நீ
         உயிரோடும் புதைக்கப்படலாம்...


*அரசுத்திட்டம் போலவே அரசுத்தொட்டிலிலும்
         அவசரமாய் நீ அடக்கம் செய்யப்படலாம்...


*நீ பிறந்த நேரத்தில் சில நோயாளிப்பெருசுகள்
         இறந்தாலும் இராசி இல்லாதவள் 
          அதிர்ஷ்டம் கெட்டவள் என  அடுக்கடுக்காய் 
         உனக்கு பெயர்கள் சூட்டப்படலாம்...

*உலகமென்பது உனக்கு உன் வீட்டு சமயலறையாய்
         மட்டுமே மாற்றப்படலாம்...

*பள்ளிப்படிப்பும் கூட உன் வீட்டுப்படியோடு 
        முடிக்கப்படலாம்...

*அடிமையாய் நடக்கப்பழகுமாறு உனக்கு 
        அடிப்படைக்கல்வி கற்றுத்தரப்படலாம்...


*அடங்கிநடப்பதே அன்பென்று உனக்கு
        அறிவுறுத்தப்படலாம்...

*நீ பேசுவதும் சிரிப்பதும் கூட 
        குற்றமென்று உனக்கு சட்டமாக்கப்படலாம்...

*மாப்பிள்ளை பார்க்கும் நாடகமும் அவசரமாய் 
        உனக்கு அரங்கேற்றம் செய்யப்படலாம்...

*உன் மௌனத்தைக்கூட சம்மதமென நினைத்து 
       கட்டாய கணவன் உனக்கு கல்யாணத்தில் வரலாம்...

*கோவலக் கணவனுக்கும் கண்ணகியாய் நடக்க நீ 
       தண்டிக்கப்படலாம்...

*உன் உரிமைக்காக நீ எதிர்க்கும் போது
       மண்ணெண்ணெய் சிலநேரம் உன்னையும் எரிக்கலாம்...


*சட்டங்கள் உன் விஷயத்தில் மட்டும் ஏனோ 
       சத்தியம் மீறலாம்...

*உன் கொலை என்பது பல நேரம் 
       தற்கொலையாய் நிறம் மாறலாம்...

*காவல் நிலையங்களில்கூட 
       உன் கற்பு களவாடப்படலாம்...

*இழந்த கற்புக்கும் விலையாய் நீ விலைமாதாய்
       விளம்பரம் செய்யப்படலாம்...

*ஆகையால் இனிமேலாவது யாரும் 
      மங்கையராய்ப் பிறப்பதற்காக மறந்தேனும் 
       மாதவம் செய்ய வேண்டாம்... 

amuthavisham


 

   அமுதவிஷம்...
1
*நீ ரொம்பவும் அதிர்ஷ்டசாலியாம்...
       நிறையபேர் பொறாமைபடுகிறார்கள் ...
. ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும்...
       நான் எவ்வளவு துரதிர்ஷடசாலி என்று ...
2
*எனக்கு உன் காதலும் தெரியும்...
       உன் வலியும் புரியும்...
   உனக்கு என் காதலும் புரியாது...
        என் வலியும் புரியாது...
3
*உனக்கும் ஆயிரம் பேர் கிடைக்கலாம்...
       எனக்கும் ஆயிரம் பேர் கிடைக்கலாம்...
  ஆனால்   எனக்கு நீயும் உனக்கு நானும் 
       கிடைத்தால் அதுதான் நம் வாழ்க்கை...
4
*நம் கடைசி சந்திப்பில் உன் கண்களும் 
        அந்த மௌனமும் காட்டிகொடுத்துவிட்டது...
  உனக்கு மறுக்க தெரியவில்லை...
         மறைக்கவும் தெரியவில்லை...
  எனக்கு வெறுக்க தெரியவில்லை...
          விலக புரியவில்லை...

5
*நீ என் உணர்வுகளை நேசித்தாய்...
        நான் உன் உணர்வுகளை மதித்தேன்...
  உறவுகள் நம்மை எதிர்க்கிறார்கள்...
         என்ன செய்வது?
  காதலுக்கு மட்டும் இன்னும்
          மரியாதை கிடைக்கவே இல்லை...


6
*உன்  காதலும் உண்மைதான்...
   என் காதலும் உண்மைதான்...
   இங்கே நாம் மட்டும்தான் பொய்...
7
*நீ உன் பாசத்திற்காக காதலை
         தியாகம் செய்துவிட்டாய்...
  நான் என் காதலுக்காக காதலியை 
           மட்டும் தியாகம் செய்துவிட்டேன்...
  ஆனால் ஒரு உண்மையான அன்பை 
          எந்த விலைக்கும் வாங்க முடியாது...

8
*காலம் என்பதென்னவோ நல்ல மருந்துதான்...
   ஆனால் காயங்கள் போதுமடி எனக்கு...
9
*என்னுள் எப்போதும் வலித்துக்கொண்டே இருப்பதால் 
       நான் காதலையே வெறுக்கிறேன்...
  ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?...
      உன்னை எப்போதுமே காதலித்துக்கொண்டே இருக்கிறேன்...

 10

*நம் இருவருக்குமே சந்தோஷமாக இருக்கவும் தெரியவில்லை...
       சந்தோஷமாக நடிக்கவும் தெரியவில்லை...
  ஆனாலும் நாம் ஒருவரின் சந்தோஷத்திற்காக இன்னொருவர்
        பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறோம்...

11
*நம் இருவரின் பிரிவில் இழப்பென்பது இருவருக்குமேதான்...
  ஏனென்றால் என்னால் மட்டும்தான் உன்னை
       அதிகம் உணர்ந்துகொள்ளவும் முடியும்...
  உன் அருகாமை மட்டும்தான் எனக்கு எப்போதும் சந்தோஷம் தரும்...


12

*நம் காதலை யாராலுமே அழித்துவிட முடியாது...
  ஏனென்றால் என் காதலின் முதல் நினைவுச்சின்னமாய்
         நீ எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
   உன் காதலின் கடைசி நினைவுச்சின்னமாய்
         நான் இங்கே  ஜடமாகிவிட்டேன்...

13
*நீ சாகக்கூடாது! என உன்னிடம் சத்தியம் வாங்கி இருக்கிறேன்..
   அதனால் எனக்காகத்தான் நீ உயிரோடிருகிரோய். ,
  உனக்காகவும்  அல்லவா நான் இறந்து கொண்டேயிருக்கிறேன். 
       



NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...