Thursday 26 May 2016

ITHARKU PEYAR....

*உன் உடல் மேல் ஆசை கொண்டு 
மோக தீயில் நான் எரியவில்லை...

ஆனால் என்னையும் தாண்டியும் உன்னை 
உயரம் கொண்டு செல்ல நினைக்கிறேன்...

*உன் கன்னத்தில் முத்தமிட்டு 
கள்வெறி கொண்டு நான் திரியவில்லை...
ஆனால் நீ கால் கொண்டு 
நடந்த வலியை  நான் உணர்கிறேன்...

*உன் உதட்டைக்  கடித்து 
கழுத்தில் புதைந்து 
மார்பின் மத்தியில்
 மதி மயங்கி கிடக்கவில்லை...
உன் பலத்தை உனக்கு 
உணர்த்த விரும்புகிறேன் ...
உன் கனவுகளுக்கு 
உயிர் கொடுக்க ஆசைப்படுகிறேன் ...

*உன் நிறத்தை பார்த்து நான் நெருங்கி வரவில்லை...
ஆனால் உன் சுயத்தையும் சுதந்திரத்தையும் \
நீ இழக்க நான் அனுமதிக்க மாட்டேன்... 
...
*காதல் என்பது காமம் இல்லை... அனுபவம் இல்லை...
 பொழுதுபோக்கு இல்லை... 
*மிகச்  சிலருக்கு தான் காதல் வாழ்க்கை...

*காதல் மிருகத்தை மனிதனாக்கும்...
மனிதனை .புனிதமாக்கும்..

*சில வருடங்களுக்கு பிறகு நீ .உணர்வாய்...
காமத்தை விட காதல் மேல்...
உண்மையான அன்பு அதற்கும் ..மேல.

*உன்னை விட்டு வெகு தொலைவில்
விலகி  நான் அன்று இருப்பேன்...
உன்னை மிக உயரத்திலும் வைத்திருப்பேன்...




Wednesday 25 May 2016

NETRU...INDRU...NAALAI...

நேற்று...



உன்னைப்  பார்க்கத்  துடித்தேன்...
பழகப் பிடித்தேன்...
பேசத் தவித்தேன்...
பிரிய வலித்தேன்...

இன்று...



இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்...

பார்க்கும் போதெல்லாம் வலிக்கிறது ...
உறங்காமல் மனம் தவிக்கிறது...
விடை தெரியாத கேள்விகள்...
மனம் முழுக்க ரணமாய் ...

நாளை...



சிறந்த எதிர்காலம் தருவேன்...

பிரிய நினைப்பேன்...
வெகு தொலைவுக்கு செல்ல...

மறக்க பழகுவேன்...

வாழ்த்த மறக்க மாட்டேன்..

வாழ்க வளமுடன்...

KATHALUM KADANTHU POGUM....

                                 **நான்  உன் மேல் வைத்தது நம்பிக்கை...


**நீ எனக்கு செய்ததோ துரோகம் மட்டும் தான்...

**பிரசவ வலிதான் ஒரு உயிரின்  அதிகபட்ச .வலி.
துரோகத்தின் வலி அதுக்கும் மேல...



**நான் வேண்டும் என்றால் உண்மயாய் இரு...
உண்மையை சொல் காத்திருக்கிறேன் என்றேன்...

**என்னிடமே பொய்யாய் நடிக்கிறாய்...
என் கண்ணைப் பார்த்து கடைசிவரையில் நீ பேசவே இல்லை...

**இந்த உலகுக்கே நீ பொய்யாய் இருந்திருக்கலாம் ...
எனக்கு இருந்திருக்க  கூடாது...  

**உன் வாழ்க்கையில்  இனிமேல் 
ஆயிரம் பொய்கள்  கிடைக்கும்...

**நீ இழந்ததோ திரும்ப பெற முடியாத உண்மை...


**உண்மையான அன்பு என்பது இரு மனதோடு சரி...
அது ரகசியம்...தனிமை மட்டும் தான் .தேடும்..
புரிந்துகொள்ளும் வரை காத்திருக்கும்...
எதையும்  மறைக்காது... மறக்காது...

  **என் வலியை உணராத நீயா 
அன்பை புரியப்  போகிறாய்?...

**உன் அலட்சியம் பிடிவாதத்தால் உண்மையை... தாய்மையை...   இழந்துவிட்டாய்...

**என் அன்பு அம்மா அப்பாவைபோல்...
சுயநலமில்லாதது..எதிர்பார்ப்பு  இல்லாதது ...

**எனக்கு உன்  மேல் இனி எந்த உரிமையும் இல்லை...
இனி நீ எந்த எல்லைக்கும் போகலாம்...
எப்படியும் வாழலாம்...

**நெருப்பை பட்டாவது புரிந்து கொள்...

**எனை பழி வாங்க நினைத்து 
யாரும் உன்னை பயன்படுத்த அனுமதிக்காதே....

**இனியாவது புத்திசாலியாய் இரு...
உன் குறிக்கோளை மட்டும் தவமாய் நேசி...



**படிப்பு மட்டும்தான் மிகச் சிறந்த பாதுகாப்பு...
அது தெரியும் போது அதன் மதிப்பு உனக்குத்  தெரியும்...

**எனக்கு   பொய் பேசத்  தெரியாது...
நான் வாழ்வதே உங்களுக்காகத் தான்...
இரண்டில்  எது உண்மை?...

**அன்பில் இரு வகை...
நீ வார்த்தையா ? வாழ்க்கையா ?

**வாழ்வில் ஏதோ ஒரு உறவுக்காவது உண்மையாய் இரு...

**குறைந்த பட்சம் உனக்காவது உண்மையாய் இரு
.
**என்றாவது ஒரு நாள்  என் உண்மை .வலிக்கும்...
துரோகத்தின் வலியைவிடவும் அது  அதிகமாய் இருக்கும்...

**அன்று உன் ஈகோ  உடைந்து உண்மைக்காக ஏங்குவாய்...
அன்றைக்கும் உனக்கு நான்  தாயுமானவனாக இருப்பேன்...

SUYASARITHAI....

**கல்லாய் இருந்தேன்...
**எறும்பாய் ஊர்ந்தாய்...
**அன்பில் கரைத்தாய்...

**அழவைத்தாய்...
**விலகினாலும் நெருங்கினாய்...
**பணக்காரி நீ? பயந்தேன்...
**உயிரையும் தரத் துணிந்தாய்...
**பாசம் மிரட்டியது...பயந்தாய்...

**காரணம் சொல்லாமல் மௌனம் காத்தாய்...
**உதடுகள் சேர்த்து பிரிய சொன்னாய்...
** படிக்க வேண்டும்...விட்டு விடுங்கள் என்றாய்...
**எல்லோருக்கும் நீ துரோகி... எனக்கு நீ தியாகம்...
வெகு தூரம் வந்தேன்...
**நான்கு வருடங்கள்...
**மன்னித்து விடுங்கள்!... நட்பாய்  இருப்போம்...

**கண்ணீர் விட்டாய்...மறக்க முடியவில்லை...
ஆனால் மன்னித்துவிட்டேன்...
**என்றைக்கு சந்திப்பேன்... தெரியவில்லை...
அன்றைக்கும் அழுவேன்...
**தனி மரம் நான் தோப்பாகிவிட்டேன்..
.
என்னையும் தாண்டி வளர்ந்தாய்...
**இன்னமும் தனி மரமாய்...
**


**என் அன்பு தவறு தான்...
ஆனால் அன்பில் தவறில்லை...

**கடைசி வரை போராடினேன்...
தோற்றுப்போனதில் வருத்தமில்லை...
**கத்தியில்லை ... ரத்தமில்லை...காயமில்லை...வலிக்கிறது ... 

**வாழ்கையில் உண்மை அன்பு ஒரு முறைதான் கிடைக்கும்...
இழந்தபின்தான் அதன் அருமை புரியும்..
இருவரும் இறக்கும்வரை  அது சாகாமல் வாழும்...


**கருப்பு கண்ணாடி அணிகிறேன்...
**பார்க்கக் கூடாது ! என்றில்லை...
**கண்ணீர் தெரியக்கூடாது ...






SOLLATHATHUM UNMAI...

**நான் நினைத்தபடி நீ நடக்கவில்லை...
**நான் விரும்பியபடி நீ உன்னைத் தரவில்லை..
**என் வார்த்தைகளை எல்லாம் நீ மதிக்கவே இல்லை...
**பேருந்து நிலையத்தில் திரிந்தேன்...
**ஊர் முழுவதும் அலைந்தேன்...
**எத்தனை  முறை கணக்கே இல்லை...
**வெயிலில் கருகினேன்... மழையில் நனைந்தேன்...
**உன் எதிர்காலம் தேடி நிகழ்காலம் தொலைத்தேன்...

**எனக்கு உன்னை எதற்கு பிடித்தது தெரியுமா?
நீ படிக்க விரும்பினாய்... விரும்பி படித்தாய்...
அதற்காக என்னையே விலகச் சொன்னாய் ...

**இரண்டு வருடங்கள் உன்னை பிரிந்து இருந்தேன்...
 வாழ்க்கை  முழுவதும் என்னோடு இருப்பாய் ...நம்பினேன்...
**உன்னோடு மட்டும்  இல்லை...
உன்னைப்பற்றியும்  நிறைய கனவுகள்  வைத்திருந்தேன்...
என்னால் நீ உச்சம் பெற ஆசைப்பட்டேன்...
**உன் நல்ல எதிர்காலத்திற்காக உன்னையும் இழக்கத் துணிந்தேன்...

**நான் கனவிலும் நினைக்கவில்லை...
நீ சாதாரணமாக செய்கிறாய்...
**இப்போதும் எனக்கு உன் மேல் கோபமில்லை...
எந்த நிலையிலும் உன்னை  மன்னிக்க முடியும்...
**ஆனால் என் அன்பு...நம்பிக்கைக்கு... நீ செய்த...
மறக்க முடியவில்லை...
வலித்துக்கொண்டே இருக்கிறது...
எத்தனை  வரிகள்...கவிதைகள்...எழுதினாலும் 
இன்னும் வலி மிச்சமிருக்கிறது...
**இளமையில் புரியாதது... 
உனக்கு இருபதில் புரியும்...
முப்பதில் ..உணர்வாய்..
நாற்பதிலும் கண்ணீர்   வரும்...
**ஒரு பெண் இரண்டில்  முழுமை பெறுவாள்...
ஒன்று தாய்மை அது  வலி ... என்றாலும் அது  இல்லாத வாழ்க்கை வெறுமை ....
இரண்டு வாழ்க்கை முழுவதும் ஒரு அன்பு..
ஆண்மை மட்டுமில்லை...
அது தாய்மை அன்பாய் இருக்கவேண்டும்...
**ஆவின் ஆட்டுப்பால்  விலையுண்டு...
தாய்ப்பாலுக்கு தங்கம் கூட ஈடில்லை...
**என் வாழ்க்கையில் நான் முழுமையாய் நம்பிக்கை வைத்த யாரும்
என் நெஞ்சில்கூட குத்தியதில்லை...
கண்களை மூடும்போது எப்போதும் இதயம் வலிக்கிறது  ...
உறக்கம் களைந்து எழுந்தால் கண்கள் எரிகிறது...
இரவு பொழுதுக்கு பகலே  பரவாக  இல்லை...
**என் ஆசை எல்லாம் இப்போது நல்ல உறக்கம் மட்டும் தான்...
**நான் என்ன சாபமிட்டாலும் பலிக்கும்...
அதனால்தான் வாழ்க வளமுடன்!! வாழ்த்துகிறேன்...
**என்றாவது ஒருநாள் உன்னைப்  பார்க்கும் நாளில்வரும் 
என் கண்ணீரை சுவைத்துப் பார்... தித்திக்கும்...
அதுதான் இந்த தாய்மையின் அன்பு.
**உன் கண்ணீருக்கு நீயே கூட காரணமாய் இருக்கலாம்...
ஆனால் அதை துடைத்துவிடும் முதல் கை என்னுடையதாய்
இருக்க மட்டுமே நான் ஆசைப்பட்டேன...
**நான் சொன்னால் நீ கேட்க மாட்டாய்...தெரியும் ...
இருந்தாலும் சொல்கிறேன்...
என்னால் நீ வாழ்ந்தாய் ...
இது மட்டும்தான் என் ஆசை... 
நான் உன்னை  இழந்தாலும் நீ இலட்சியத்தை அடைய வேண்டும்...

**நீ என் உரிமை...முழுமை...நீ எனக்கு மட்டும்...நம்பினேன்...
உண்மையாய் இருந்தேன்...
வலிக்கவில்லை...
காயப்படுத்தினாய்...உண்மையாய் இல்லை...
வலிக்கிறது...
**படிக்கவேண்டும்...விலகிவிடுங்கள்...சொன்னது 
 வலிக்கவில்லை...
திரும்ப திரும்ப வந்தேன்...பதிலே இல்லை...
வலிக்கிறது...
**இரண்டு வருடங்கள் உன்னை பிரிந்து இருந்தேன்....
வலிக்கவில்லை...
நான் நினைத்தபடி உன்னை செதுக்க முடியவில்லை...
நீ விரும்பிய வாழ்க்கையைத் தர முடியவில்லை...
வலிக்கிறது...
**உன்னோடு பேசவில்லை...பழகவில்லை...
வலிக்கவில்லை...
உயிரையே தருவேன்...  சொன்ன நீ பாசத்தில் தடுமாறினாய்...
 வலிக்கிறது ...
**என்னிடம் நிறைய கேள்விகள்...நீ பதிலே தரவில்லை...
வலிக்கவில்லை.....
உன் எதிர்காலம் மிகப்பெரிய  கேள்விக்குறியாய்  இருக்கிறது..
வலிக்கிறது ...
**நம் உடல்கள் சேரவில்லை...காமமில்லை..
.வலிக்கவில்லை...
விடுதலை தேடி உயிர் துடிக்கிறது...கண்கள் அழுகின்றது...
வலிக்கிறது...
**நீ எனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை...
சொன்னபடி நடக்கவில்லை...
வலிக்கவில்லை...
 நீ நடந்து வருவதைப் பார்க்கையில்   மனசு
 வலிக்கிறது ...
**நீ எனக்கு வலியை மட்டுமே தந்து இருக்கிறாய் ...
வலிக்கவில்லை...
என்னால் மட்டும்தான் உனக்கு 
சந்தோஷத்தை தர முடியும்... தர முடியவில்லை...
வலிக்கிறது...
**உன்னை திரும்ப திரும்ப மன்னித்தேன்...
வலிக்கவில்லை...
உன்னை விட்டு பிரிந்து சென்றாலாவது உன்னை மறக்கலாம்...
நினைக்கிறேன்... 
வலிக்கிறது.
**வலிக்கவில்லை...ஆனால் வலித்துக் கொண்டே  இருக்கிறது...
**இறுதியாய் இரண்டு வரிகள்...
**என் வாழ்க்கையில்  உன்னை தவிர அதிக வலியை 
இனி யாரும் தரப் போவதில்லை...
**உன் வாழ்க்கையில் என்னிடம் பெற்ற 
தாய்மையின் அன்பை இனி யாரிடமும் நீ உணரப்  போவதுமில்லை...







NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...