Saturday 17 December 2016

MATHANGALIL AVAL...

மாதங்களில் அவள்...



**மார்கழி முதல்
-நாளில் தொடங்குகிறாய்
மாக்கோலம்...
எந்த தை நாளில்
காணப்போகிறோம்?...
நம் மணக்கோலம்!...

**நீ போடும் ஒவ்வொரு
கோலத்திலும்
ஒளிந்திருக்கிறது!...
நீ என்னிடம் சொல்லாத
எனக்கான காதல்!...

**\எத்தனை புள்ளிகள்
கொடுத்தாலும்
கோலத்தில்
சிறைப்படுத்துகிறாய்!...
என்னை எப்போது
உன்னுள்
சிறைப்படுத்தப்போகிறாய்!...

**கோலத்தை முடித்துவிட்டு 
கூந்தலில் ஈரத்துண்டோடு 
நீ தலை சாய்த்துப்பார்க்கையில் 
எனக்கு குழப்பம் வரும்!...
எது அழகு கோலமென்று!...


**என் கோலத்தில் 
உனக்கு
எந்தக்கோலம் 
பிடிக்குமென்று 
கேட்கிறாய்?..
எனக்குப் பிடித்த 
ரங்கோலி நீயிருக்க 
நான் வேறென்ன 
சொல்வது?...

**ஒரு புள்ளியில் தொடங்கி 
அதே புள்ளியில் 
முடிகிறது கோலம்...
உன்னுள் தொடங்கி 
உன்னோடு 
முடிகிறது 
என் காதல்!...


**நீ போடும் கோலம் 
இன்றோ...நாளையோ...
அழிந்துவிடும்...
ஆனால் என்றுமே 
அழியாமல் இருக்கிறது!...
என் நெஞ்சில் 
உன் கோலம்...

**இப்போதும் நீ 
இல்லாத உன் 
தெருவில் 
நிறைய கோலங்கள்...
எந்த கோலத்தையும் 
பிடிக்கவில்லை...


**கோலமும்...வாழ்க்கையும்...
ஒன்றுதான்...
புள்ளிகளை 
சரியாக இணைக்காவிட்டால் 
அலங்கோலமாகிவிடுகிறது!...
 
**காதலும்...கோலமும்...
ஒன்றுதான்...
அழிக்க மட்டும் 
மனம் வருவதேயில்லை....


Sunday 13 November 2016

THEDALUM...THEDAL NIMITHAMUM....

தேடலும்...தேடல் நிமித்தமும்....

**நீ சுலபமாக கண்டுபிடிக்க
உன்னுள் ஒளிந்துகொள்கிறேன்...
நீயோ உன்னைவிட்டு மற்ற
இடங்களில் என்னை தேடுகிறாய்...

**எங்கேயாவது
தொலைந்து போ!
கோபமாய் விரட்டுகிறாய்...
 ஒளிய இடமின்றி
மீண்டும் உன்னிடமே
தொலைந்து போகிறேன்...

 **ஒருநாள் நிஜமாகவே 
தொலைந்துபோக நினைக்கிறேன்!
ஆனால் நீ தேடுவாயோ!
பயமாய் இருக்கிறது,,,


**என்னைத் திரும்ப திரும்ப
தேடிக்  கண்டுபிடித்து
மீண்டும் உன்னிடமே
தொலைந்து போகிறேன்!.

**நீ எப்போது தேடினாலும் 
நான் உனக்கு கிடைக்கிறேன்...
அதனால்தான் அடிக்கடி 
என்னை நீ தொலைக்கிறாய்...


**என்னை விட்டு விடு!...
கண்டுபிடிக்க வேண்டாம்!
நீ கோபித்துக்கொள்கிறாய்...
ஆனால் என்ன?
பாதுகாப்பான இடம் தேடி 
மீண்டும் நீ என்னிடமே 
தொலையத்தான்  போகிறாய்!...



**என்றோ தொலைந்த 
பொருளை இன்று 
கண்டுபிடித்துவிட்டு 
சந்தோஷப்படுகிறாய்...
உன்னுள் தொலைந்த என்னை 
எப்போது கண்டுபிடிக்கப்போகிறாய்?!

**ஒருநாள் பணத்தைக் 
காணவில்லையென 
தேடிக்கொண்டிருந்தாய்! 
எனக்குத் தோன்றியது...
என்றாவது ஒருநாள் 
என்னையும் இப்படித்தான் 
தேடப்போகிறாய்!...


**முன்பெல்லாம் ஒருவர் 
மனதில் இன்னொருவர் 
ஒளிந்துகொண்டு 
நடித்துக்கொண்டே 
தேடிக்கொண்டிருந்தோம்!...
 இப்போது இருவருமே 
எங்கோ தொலைந்துவிட்டோம்!
தேடிக்கொண்டிருக்கிறோம்!...

**தொலைவதும்...
தேடுவதும்தான் காதல்...
தேடல்தான்  வாழ்க்கை...

நீ எங்கோ இருக்கிறாய்!!!...
நான் இங்கே இருக்கிறேன்!!!...
நம்மை யாரென்று...
தெடிக் கண்டுபிடித்து
சேர்த்து வைக்கும்...
காதல்!!!...


உன் பெண்மை தேடலின்
ஆண்மை  யாரென்று
தெரியவில்லை!!!...
ஆனால்...
என் ஆண்மை
தேடலின்
முழுபெண்மை நீ!!!...




**தேடல் என்பது நம்பிக்கை...
நீ என் வாழ்க்கைத் தேடல்...
கிடைக்கும்வரை தேடுவேன்...
இல்லை என்றாலும்
என் தேடல் முடிந்துவிடும்!... 

தேடலும்...தேடல் நிமித்தமும்....





Monday 10 October 2016

ENNAIP PATRI....

என்னைப் பற்றி...


** உணர்ச்சியை விற்று வாழ்பவர்க்கிடையில் 
உணர்ச்சியைக் கொன்று வாழ்ந்து கொண்டிருப்பவன்...

**நேசிக்கத் தெரிந்தவன்...
அதனையே யாசிக்கக் கூசுபவன்...

**ரோஜாவை மட்டுமல்ல...
அதன் முட்களையும் 
முத்தமிடத் தெரிந்தவன்...

**வார்த்தைகளால் காயப்படுத்துபவர்களையும் 
மௌனத்தால் சமாதானம் செய்பவன்...

**உண்மைகளுக்கிடையில்தான் 
எப்போதாவது பொய்களைப்  பேசுபவன்...

**வார்த்தைகளுக்காகவும்...வாக்குக்காகவும்..
வாய்ப்புகளை...வாழ்க்கையை...இழந்தவன்...

*ஆசையை அழிக்கத் தெரியாவிட்டாலும் 
நிறையவே அடக்கத் தெரிந்தவன்...

**காதலில்கூட காத்திருக்கவைத்தலை 
விரும்பாதவன்...


**நம்பிக்கை வைத்தவர்களுக்கு 
துரோகம் நினைக்காதவன்...
  மன்னிப்பவன்...எதையுமே மறக்காதவன்...

**வாழ்க்கையெனும் மேடையில் தவறுகள் 
செய்ய நிறையவே வாய்ப்புகள் கிடைத்தும்...
இன்னும் நல்லவனாகவே 
நடித்துக்கொண்டிருப்பவன்...

Thursday 25 August 2016

OTHIGAI...

     ஒத்திகை..

*உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்!...
நம் முதல் சந்திப்பிலேயே உன் கண்களில் 
தெரிந்த மின்னலும்...

*புகைப்படத்திலும் கூட நான் 
அழகாய் இருப்பதாய் நீ சொன்னதும்...

*திரைப்பாடல்களில் ஆண் குரல் வரிகளை நான் பாட...
பெண் குரலில் நீ தொடர்ந்ததும்...

*செய்தித்தாளில் வார ராசி பலன்களை 
என்னுடைய ராசிக்கு நீ பார்த்துச் சொன்னதும்...

*பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று 
மௌனமாகி என்னையே பார்த்துக்கொண்டிருந்ததும்...

*நேற்றுதான் உன்னிடத்தில் 
என்னைக் கொடுத்தேன்...பாடல்...திரைப்படம்...பார்த்தேன்...
சொல்லி நீ தலை குனிந்ததும்...

*உங்களுக்காகத்தான் சமைத்து எடுத்து வந்தேன்...
நான் ருசித்து சாப்பிடுவதை நீ ரசித்ததும்...

*என் பிறந்த நாள் வரும் முன்பே 
நீ அடிக்கடி நினைவுபடுத்தியதும்...

*நேத்து ராத்திரி நீங்க தான் 
சிகரெட்டால் சுட்டிங்க! 
உன் கையில் உள்ள காயத்துக்கு 
நீ விளக்கம் சொல்லியதும்...

*எந்தப் பெண் என்னிடம் வலியப் பேசினாலும் 
உன் கண்களில் தெரிந்த பொறாமையும்...

*எந்தப் பெண்ணையாவது நான் அழகென்று 
சொல்லும்போது உன் 
கண்களின் கோபமும்....

*கல்விச்சுற்றுலாவின் பேருந்துப் பயணத்தில் 
கண்மூடி என் தோளில் சாய்ந்து  நீ உறங்கியதும்...

*கடல் அலையில் நீ என் கை பிடித்து...
 நனைத்து என்னோடு நீ விளையாடியதும்...

*மரியாதை இல்லாமல் எனை அழைத்து...
வெட்கப்பட்டு நீ தலை குனிந்ததும்...

*என்னைபோல்தான் மாப்பிப்ளை 
வேண்டுமென்று நீ என்னிடமே கேட்டதும்...

*நாளைக்கு நீங்க வர மாட்டிங்களா!
விடுப்பில் நான் சென்றபோது 
உன் வினாவில் தெரிந்த ஏக்கமும்...

*எல்லாமே உன் வருங்கால வாழ்கைக்கான 
ஒத்திகைதான்...
உன் கணவனிடம்
 என்னை நல்ல நண்பனென்று 
அறிமுகப்படுத்தியபோது தெரிந்து கொண்டேன்...

 

 

 

 

 






Wednesday 27 July 2016

MANASU...

*இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் 
இன்னும் இன்னும் சேர்க்க ஆசை வைக்கும்...


*முயற்சிகள் இல்லாமலேயே முன்னேற துடிக்கும்...

*வெற்றி கிடைக்கும் போதெல்லாம் 
உழைப்பினால் வந்ததென்று இறுமாப்பு .கொள்ளும்..

*தோல்வி கிடைக்கும்போது  மட்டும் 
அதிர்ஷ்டத்தின் மீது பழி போடும்...

*தவறான செயல்களையும் 
சரியென்று நியாயம் கற்பிக்கும்...

*உலகமே இப்படித்தானென்று செய்கின்ற 
குற்றத்துக்கு விளக்கம் சொல்லும்...

*தெய்வத்தையும்கூட செய்த பாவத்துக்கு பங்குதாரர் ஆக்கும்..

*ஊர் பொது சண்டையை விசாரித்து விளக்காமல் 
அமைதியாய் கைகட்டி வேடிக்கை ..பார்க்கும்..

*அஞ்சுக்கும் பத்துக்குக்கும்  அல்லாடும் 
அன்றாடம் காய்ச்சியிடம் அநியாமாய் 
பேரம்பேசி பொருட்கள் வாங்கும்...

*அன்பான துணை இருந்தாலும் அங்கங்கு பார்வையை அலையவிடும்...

*அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் கட்டி ஏமாறும்...

*அதிர்ஷ்ட சீட்டு வாங்கும்போதே பரிசு கிடைத்ததாய் 
நினைத்து முதல் பரிசு பணத்துக்கு இப்போதே கணக்குபோடும்...

*அதிக வேகம் ஆபத்து தெரிந்தே விதிகளை மீறி 
வாகனத்தில் பறக்கும்...

*நம்பிக்கையை மீறி சில இடங்களில் 
சந்தேகம் வளர்க்கும்...

*தோல்விகளின்போது மட்டும் தெய்வத்தின் துணை தேடும்...

*சிலவற்றை மன்னித்து மறந்துவிடுகிறது...
அதனால்தான் இன்றும் மனிதனாய் இருக்கிறது...

*சிலவற்றை எப்போதுமே மறந்து போவதில்லை...
அதனால்தான் என்றும் மனிதனாய் இருக்கிறது...

Wednesday 6 July 2016

NAANGAAM NILAI...

*நான்காம் நிலை...

*ஒவ்வோர் நாளுமே எனக்கு இப்படித்தான் ஆரம்பிக்கிறது...
*காலையில் எழும்போதே தரையில் கிடப்பேன்...
*தலையணையும்... மெத்தையும் தனியாய் கிடக்கும்...

*பால் கார்டுக்கு பதிலாக ரேஷன் கார்டு கொண்டு 
பால்பூத்துக்கு சென்று பாதியில் திரும்பி வருவேன்...

*குளியலறையில் கண்களை திறந்து கொண்டே 
சோப்பு போட்டு கண் எரிச்சலில் அவதிபடுவேன்...

*சாப்பிட்டுவிட்டு பைக் சாவியை இலக்கில்லாமல் தேடி கடைசியில் சட்டைப் பையில் இருந்து எடுப்பேன்...

*வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா!
எதிரில் வரும் வாகன ஓட்டிகளிடம் வசவு வாங்குவேன்...

*திரையரங்கில் டிக்கெட் எடுத்து முன் இருக்கை 
இடங்களில் எல்லாம் உன்னை தேடி ஏமாந்து 
இடைவேளையிலேயே எழுந்து வருவேன்...

*வீட்டுக்கு வரும் உறவினர்களை எல்லாம் சரியாய் விசாரிக்காமல் 
எல்லோரிடமும் பேச்சு வாங்குவேன்...

*கூரியர்.. போஸ்ட்... யார் கடந்து போனாலும்
திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன்...

*பைத்தியமா நீ! நண்பன் உலுக்கியபோதுதான்
 என்ன கேட்டாய்!  கலைந்தேன்...

*என்னவெல்லாம் சாப்பிட்டாய்! கேள்விக்கு 
சாப்பிட்டேனா!  சந்தேகம் வரும்...

*இடம் மாறி அணிந்த செருப்பின் கால் வலி அப்போதுதான் உரைக்கும்...

*நான்காவது முறை கேட்கும் போதுதான் உதடு 
மருத்துவரிடம் பெயரையே உச்சரிக்கும்...

*ரத்த அழுத்தம் அதிகமாய் இருக்கிறது...
உணவு கட்டுப்பாடுகள் அவர் சொல்லும்போதும் 
மனம் செல்பேசியிடமே!  இருக்கும்...

*இரவு உறங்கும் முன் புதிதாய்  சந்தேகம் முளைக்கும்...
காலையில் பல் துலக்கினேனா!

*இப்படிதான் என் ஒவ்வொறு நாளுமே கழிகிறது...

*நினைவுகளே எனக்கு நீயாகிப் போனதில் மறதியாகிவிட்டது...

Saturday 2 July 2016

SARASARI...

சராசரி...

*என்னுள் கோபம் உண்டு...
ஆனால் பொறுமையை இழந்தவனில்லை...
வன்முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை...

*என்னுள் கனவுகள் உண்டு...
ஆனால் நிறைய நாட்கள் நான் அதில் நல்ல 
உறக்கத்தைத்தான் தேடியிருக்கிறேன்...

*என்னுள் தோல்விகள் உண்டு...
ஆனாலும் இன்னும் என் மனம் 
நம்பிக்கையை மட்டும் இழந்ததில்லை...
கடைசியில் நான்தான் ஜெயித்திருக்கிறேன்...

*என்னுள் காதல் உண்டு...
அதனால்தான் என் உணர்வுகளை நான்
உயிரோடும் எரித்துவிட்டேன்...

*என்னுள் தேடல்கள் உண்டு...
அதனை நான் என்னில் ஆரம்பித்து 
உன்னோடு முடித்துவிட்டேன்...

**என்னுள் சுயநலம் உண்டு...
அதற்க்காக நான் என் வாழ்க்கையே 
பலி கொடுத்துவிட்டேன்...

**என்னுள் காயங்கள் உண்டு...
ஆனால் காயங்களையே 
மருந்தாக்கிக் கொள்ளும் மனவலிமையும் உண்டு...

**எனக்கும் ஏமாற்றங்கள் உண்டு...
என்னையும் நான் ஏமாற்றிக் கொண்டதுண்டு...
ஆனால் யாரையுமே நான் ஏமாற்றியதில்லை...

**எனக்கும் சலனங்கள் உண்டு...
ஆனாலும் சில சந்தர்ப்பங்களின் போதும்கூட 
என் உணர்ச்சிகள் எல்லை மீறியதில்லை...

**என்னுள் லட்சியங்கள் உண்டு...
ஆனாலும் இன்றுவரையில் 
நானொரு யதார்த்தவாதி தான்...

**அவ்வப்போது நான் 
தலைகுனிந்து நடப்பதுண்டு...
இன்றுவரையில் எங்கும்
 தலைகுனிந்து நின்றதில்லை...

**என்னுள் மிருகம் உண்டு...
ஆயினும் இன்னும் எந்த நிலையிலும் 
என் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை...








Tuesday 28 June 2016

AVAL PEYAR...

அவள் பெயர்...

 

*என்னைச் சுற்றி எல்லாமே உன் நிகழ்வுகள் தான்...

*சாலையில் நிறைய பெயர்ப் பலகைகள் 
உன் வடிவங்களில் என் நினைவைத் திருப்பும்...

*எதிரே வரும் வாகனங்களில் நீ அவ்வப்போது 
வேகமாய் என்னைக் கடந்து போவாய்...
என் காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழலும்...

*தெய்வத்தின் முன் பிரார்த்தனை செய்து பின் 
கண் திறக்கையில் எதிரிலேயே உன் தரிசனம் தருவாய்...
என்னைக் கடவுளாய் நீ மதித்த நினைவுகளெல்லாம் 
என்னுள் நிஜமாய் மலரும்...

*செய்தித் தாள்களின் நிறைய விளம்பரங்களில் 
நீ தென்படுவாய்...
என் முன்னால் நீ சிரித்து  விளையாடியநிகழ்வுகளெல்லாம் 
கண்ணீராய்க் கரையும்...

*வானொலியின் அலைவரிசைகளில் நீ 
நிறையதடவைகள் என்னால் கேட்கப்பட்டிருக்கிறாய்...
என்னோடு நீ பேசிய அத்தனை 
வார்த்தைகளையும் என் மனம் 
மறு ஒலிபரப்பு செய்யும்...

*திரை அரங்கத்தில்...தொலைக்காட்சியில் ...
நிறையக் காட்சிகளில் உன் அடையாளங்கள்...
என் கண் முன்னால் நீ நடமாடிய நாட்களெல்லாம் 
என்னுள் காட்சியாய்  விரியும்...

*பேருந்து நிலையத்தில்... பொது இடங்களில்...
காத்திருக்கும் வேளைகளில் எத்தனையோ முறை நீதான் என் 
அதிர்ஷ்டமென்று முன்னால் நீட்டப்பட்டிருக்கிறாய்...
உன்னை மறுத்த நாட்களெல்லாம் என்னைத் தொடர்ந்து .வரும்...

*வாசிக்கும் புத்தகங்கள்...எழுதும் நோட்டுகள்...அழைக்கும் குரல்கள்...
விளம்பரப் பலகைகள்...நீ அடிக்கடி தென்படுகிறாய்...
உன்னை மறந்துபோக நினைத்தாலும் என்னையே 
பார்த்துக் கொண்டிருந்த உன் கண்கள் கண்ணீராகும்...

*திருமண நிகழ்சிகளில் மணமகளின் வடிவாக 
உன்னை யாராவது சொல்வார்கள்...
நீ என்னிடம் கேட்ட அத்தனை ஆசைகள்...கனவுகள்...
மறுபடி மறுபடி வந்து போகும்...

*உன்னைவிட்டு விலக...மறக்க...பிரிய...அவ்வப்போது 
எண்ணங்கள் வந்துபோகும்...
இயற்கையின் சதியா! கடவுளின் சாபமா!
என்னைச் சுற்றி நடக்கும் எல்லா 
நிகழ்வுகளும் உன்னைத்தான் நினைவுபடுத்துகின்றன....







Tuesday 21 June 2016

22-06-1974

22-06-1974


*நடிகையெனில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியையே 
ஒவ்வொரு வருடமும் அணைத்து 
வயதை வயதை மறைத்துக் கொண்டாடலாம்...

*தயாரிப்பாளரின் செலவிலேயே அனைவரையும் 
குளிப்பாட்டலாம்... சந்தோஷப்படுத்தலாம்...

*நடிகனெனில் நற்பணிக்கு ரசிகர்களை 
பயன்படுத்தலாம்...ரத்ததான முகாம் 
நாடெங்கும் நடத்தலாம்...


*திரைப்படமொன்றை வெளியிடச்செய்து 
பாலாபிஷேகம் செய்யலாம்...
அடுத்த வருடமே அரசியலுக்கு வருவேன்...
பன்ச் வசனம் பேசி அடுத்த முதல்வர் ஆகலாம்...

*அரசியல்வாதி அவர்களுக்காக
 மண்சோறு... ஆயிரம் ஜோடி திருமணம் நடத்தலாம்...
அங்கப்பிரதட்சணம் செய்ய சொல்லலாம்...

*மக்களின் வரிப்பணத்திலேயே அரசுத் திட்டம்
தொடங்கலாம்...அன்புப்  பரிசுகள்...
அன்பளிப்புகள் சேகரிக்கலாம்...

*மரத்தை மட்டும் நட்டுவிட்டு 
மற்றவர்களை தண்ணீர்விடச் செய்யலாம்...

*தீ மிதிக்கச் சொல்லிவிட்டு இது 
காட்டுமிராண்டித்தனம்...அறிக்கையும் விடலாம்...

*எதிர்கட்சிச் தலைவர் வறுமை ஒழிப்பு நாள்...
நலத்திட்டம் வழங்கலாம்...
வானம்பாடிகள் வந்தன...
காக்கைகள் ஓடிப்போய்விட்டன...
வசனம் படிக்கலாம்...

*திடீர் வளர்ப்பு மகன் புழல் சிறைக்கு 
ஆன்மிகப்பயணம் செல்லலாம்...


*  முன்னாள் தலைவர்கள் 
தன்னுடைய இருப்பை சுவரொட்டிகளில் சிரித்து 
மக்களிடம் காட்டலாம்...

*வியாபாரிகள் இந்த நாளையும் 
தள்ளுபடி விளம்பரத்தில் 
தந்திரமாய் பணம் சேர்க்கலாம்...


*பணக்காரர்களுக்கு இன்று மட்டும் 
தர்ம சிந்தனை தோன்றலாம்....
அனாதை இல்லம்...அன்னதானம் அமர்களப்படுத்தலாம்...

*தூண்டுவிழும் பட்ஜெட்டுக்கு 
குடும்பத்தலைவர் யோசிக்கலாம்...

*வசந்தமோ!வருத்தமோ!
வருடத்துக்கு ஒருமுறை தான்...

*வலியில் தான் என் வாழ்க்கை...

*என்பிலதனை வெயிலில் காய்கிறேன்...

*இரவினில் இறந்து...பகலில் பிறந்து...
இறந்து பிறந்து இறக்கிறேன்...

*எனக்கு மட்டும் உயிரோடு இருக்கும் 
ஒவ்வொரு நாளுமே என் பிறந்த நாள் தான்...








NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...