Wednesday 27 July 2016

MANASU...

*இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் 
இன்னும் இன்னும் சேர்க்க ஆசை வைக்கும்...


*முயற்சிகள் இல்லாமலேயே முன்னேற துடிக்கும்...

*வெற்றி கிடைக்கும் போதெல்லாம் 
உழைப்பினால் வந்ததென்று இறுமாப்பு .கொள்ளும்..

*தோல்வி கிடைக்கும்போது  மட்டும் 
அதிர்ஷ்டத்தின் மீது பழி போடும்...

*தவறான செயல்களையும் 
சரியென்று நியாயம் கற்பிக்கும்...

*உலகமே இப்படித்தானென்று செய்கின்ற 
குற்றத்துக்கு விளக்கம் சொல்லும்...

*தெய்வத்தையும்கூட செய்த பாவத்துக்கு பங்குதாரர் ஆக்கும்..

*ஊர் பொது சண்டையை விசாரித்து விளக்காமல் 
அமைதியாய் கைகட்டி வேடிக்கை ..பார்க்கும்..

*அஞ்சுக்கும் பத்துக்குக்கும்  அல்லாடும் 
அன்றாடம் காய்ச்சியிடம் அநியாமாய் 
பேரம்பேசி பொருட்கள் வாங்கும்...

*அன்பான துணை இருந்தாலும் அங்கங்கு பார்வையை அலையவிடும்...

*அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் கட்டி ஏமாறும்...

*அதிர்ஷ்ட சீட்டு வாங்கும்போதே பரிசு கிடைத்ததாய் 
நினைத்து முதல் பரிசு பணத்துக்கு இப்போதே கணக்குபோடும்...

*அதிக வேகம் ஆபத்து தெரிந்தே விதிகளை மீறி 
வாகனத்தில் பறக்கும்...

*நம்பிக்கையை மீறி சில இடங்களில் 
சந்தேகம் வளர்க்கும்...

*தோல்விகளின்போது மட்டும் தெய்வத்தின் துணை தேடும்...

*சிலவற்றை மன்னித்து மறந்துவிடுகிறது...
அதனால்தான் இன்றும் மனிதனாய் இருக்கிறது...

*சிலவற்றை எப்போதுமே மறந்து போவதில்லை...
அதனால்தான் என்றும் மனிதனாய் இருக்கிறது...

Wednesday 6 July 2016

NAANGAAM NILAI...

*நான்காம் நிலை...

*ஒவ்வோர் நாளுமே எனக்கு இப்படித்தான் ஆரம்பிக்கிறது...
*காலையில் எழும்போதே தரையில் கிடப்பேன்...
*தலையணையும்... மெத்தையும் தனியாய் கிடக்கும்...

*பால் கார்டுக்கு பதிலாக ரேஷன் கார்டு கொண்டு 
பால்பூத்துக்கு சென்று பாதியில் திரும்பி வருவேன்...

*குளியலறையில் கண்களை திறந்து கொண்டே 
சோப்பு போட்டு கண் எரிச்சலில் அவதிபடுவேன்...

*சாப்பிட்டுவிட்டு பைக் சாவியை இலக்கில்லாமல் தேடி கடைசியில் சட்டைப் பையில் இருந்து எடுப்பேன்...

*வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா!
எதிரில் வரும் வாகன ஓட்டிகளிடம் வசவு வாங்குவேன்...

*திரையரங்கில் டிக்கெட் எடுத்து முன் இருக்கை 
இடங்களில் எல்லாம் உன்னை தேடி ஏமாந்து 
இடைவேளையிலேயே எழுந்து வருவேன்...

*வீட்டுக்கு வரும் உறவினர்களை எல்லாம் சரியாய் விசாரிக்காமல் 
எல்லோரிடமும் பேச்சு வாங்குவேன்...

*கூரியர்.. போஸ்ட்... யார் கடந்து போனாலும்
திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன்...

*பைத்தியமா நீ! நண்பன் உலுக்கியபோதுதான்
 என்ன கேட்டாய்!  கலைந்தேன்...

*என்னவெல்லாம் சாப்பிட்டாய்! கேள்விக்கு 
சாப்பிட்டேனா!  சந்தேகம் வரும்...

*இடம் மாறி அணிந்த செருப்பின் கால் வலி அப்போதுதான் உரைக்கும்...

*நான்காவது முறை கேட்கும் போதுதான் உதடு 
மருத்துவரிடம் பெயரையே உச்சரிக்கும்...

*ரத்த அழுத்தம் அதிகமாய் இருக்கிறது...
உணவு கட்டுப்பாடுகள் அவர் சொல்லும்போதும் 
மனம் செல்பேசியிடமே!  இருக்கும்...

*இரவு உறங்கும் முன் புதிதாய்  சந்தேகம் முளைக்கும்...
காலையில் பல் துலக்கினேனா!

*இப்படிதான் என் ஒவ்வொறு நாளுமே கழிகிறது...

*நினைவுகளே எனக்கு நீயாகிப் போனதில் மறதியாகிவிட்டது...

Saturday 2 July 2016

SARASARI...

சராசரி...

*என்னுள் கோபம் உண்டு...
ஆனால் பொறுமையை இழந்தவனில்லை...
வன்முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை...

*என்னுள் கனவுகள் உண்டு...
ஆனால் நிறைய நாட்கள் நான் அதில் நல்ல 
உறக்கத்தைத்தான் தேடியிருக்கிறேன்...

*என்னுள் தோல்விகள் உண்டு...
ஆனாலும் இன்னும் என் மனம் 
நம்பிக்கையை மட்டும் இழந்ததில்லை...
கடைசியில் நான்தான் ஜெயித்திருக்கிறேன்...

*என்னுள் காதல் உண்டு...
அதனால்தான் என் உணர்வுகளை நான்
உயிரோடும் எரித்துவிட்டேன்...

*என்னுள் தேடல்கள் உண்டு...
அதனை நான் என்னில் ஆரம்பித்து 
உன்னோடு முடித்துவிட்டேன்...

**என்னுள் சுயநலம் உண்டு...
அதற்க்காக நான் என் வாழ்க்கையே 
பலி கொடுத்துவிட்டேன்...

**என்னுள் காயங்கள் உண்டு...
ஆனால் காயங்களையே 
மருந்தாக்கிக் கொள்ளும் மனவலிமையும் உண்டு...

**எனக்கும் ஏமாற்றங்கள் உண்டு...
என்னையும் நான் ஏமாற்றிக் கொண்டதுண்டு...
ஆனால் யாரையுமே நான் ஏமாற்றியதில்லை...

**எனக்கும் சலனங்கள் உண்டு...
ஆனாலும் சில சந்தர்ப்பங்களின் போதும்கூட 
என் உணர்ச்சிகள் எல்லை மீறியதில்லை...

**என்னுள் லட்சியங்கள் உண்டு...
ஆனாலும் இன்றுவரையில் 
நானொரு யதார்த்தவாதி தான்...

**அவ்வப்போது நான் 
தலைகுனிந்து நடப்பதுண்டு...
இன்றுவரையில் எங்கும்
 தலைகுனிந்து நின்றதில்லை...

**என்னுள் மிருகம் உண்டு...
ஆயினும் இன்னும் எந்த நிலையிலும் 
என் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை...








NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...