Monday 22 April 2013

                                                  ம. பிரபாகர்.

     
*இரண்டு செய்திகளை இன்றுவரையில் 
   நான் நம்பவே இல்லை.

*அன்று அண்ணன் பிரபாகரனின் வீர மரணம்...
   இன்று தம்பி பிரபாகரின் திடீர் மரணம்...

*எத்தனையோ மரணங்கள் பார்த்திருந்தாலும் 
   உன் மரணத்தை மட்டும் மன்னிக்கவே முடியவில்லை.

*நீதான் வேண்டும் என்று விதியே கேட்டாலும் என் 
  ஆயுளில் ஒன்றை உனக்கு கொடுத்திருப்பேனே!..

*என் இறப்புக்கு நானே அழ முடியாது என்றுதான் 
   உன் இழப்பில் அவ்வளவு அழுதேன்...

*தூங்குவது போலும் சாக்காடு என்ற வள்ளுவரே!
  இவன் விழிப்பது எப்போது?

*மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் நீ மூன்றாம் நாள் 
   உயிர்த்தெழுந்து வருவாய் என்று  நம்பினேன்...

*எல்லா அரசாங்க விதிகளும் உடனடியாய் சொல்வாயே !
   உன் விதி மட்டும் உனக்கு ஏன் தெரியாமல் போனது?

*இத்தனை வயதில் இப்படி இப்படி இருப்பேன் என்றாயே !
   முப்பதுகளில் எப்படி முடிந்து போனாய் !

*மரணத்தைவிட பிரிவுதான் வலி என்று நினைத்திருந்தேன்...
   பிரிவைவிட மரணம் கொடியது...

* உன் கண்டிப்பில் உள்ள உரிமை உன் நண்பர்களுக்கு பிடிக்கும்...
   உன் எதிரிகளுக்கு கூட உன் நேர்மை பிடிக்கும்...

*கல்லும் முள்ளும் கடந்து இப்போதுதான் நீ வாழ்வை தொடங்கினாய்...
  உன்   உயிர் நீ காணும் முன்பே ஏன் சென்றாய்...

*நண்பர்களே! காயமே இது பொய்யடா! 
  சித்தர் பாடலை நம்பாதீர்கள்...

*உடம்பை வளர்த்தேனே! உயிர் வளர்த்தேனே!
  திருமூலர் வழி செல்லுங்கள்...

*முப்பது தாண்டியதா !
  உப்பு சர்க்கரை குறையுங்கள்...
  கொழுப்பை கட்டுபடுத்துங்கள்...
  மது புகையை மறவுங்கள்...
  வருடத்திற்கு ஒருநாள் 
  மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்...

*மருத்துவ செலவு என்பது எதிர்கால முதலீடு 
  செலவழிக்க தயங்காதீர்கள்...

*இனியும் ஒரு இழப்பை தாங்க இதயத்திற்கு வலிமை இல்லை...    
   

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...