Tuesday 8 September 2015

kanakum...kathalum...

*கணக்கும் காதலும் ஒன்றுதான்...
*பிரிக்க முடியாத புள்ளியின் 
தொடக்கம்தான் கணக்கு...


இறக்கும் வரையில் மறக்க முடியாத 
முதல் சந்திப்பில் இருந்து தொடங்குகிறது காதல்.

*எண்ணிலிருந்து  தொடங்குகிறது கணக்கு...
கண்ணிலிருந்து தொடங்குகிறது காதல்...



*முடிவிலிப் புள்ளியில் இணைகோடுகள் 
சந்திக்கின்றன சொல்கிறது கணக்கு...
வாழ்க்கை  முடிவதற்குள் முதல் 
காதலியை சந்திக்க துடிக்கிறது மனசு...

*கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் 
இல்லாமல் கணக்கில்லை...
சந்திப்புகளை கூட்டுதல் பேசிக் கழித்தல் 
மகிழ்ச்சியை பெருக்குதல் வருங்காலத்தை 
வகுத்தல் காதலில் உண்டு...

விதியில் தீர்க்கபடுகிறது  கணக்கு...
சதியால் பிரிக்கப்பட்டு 
விதிப்படி இணைவோம் எனும் 
நம்பிக்கையில் வாழ்கிறது காதல்...

 *கடைசி எண்  கணக்கில் இல்லை...
இறுதி மதிப்புக்கு எல்லையும் இல்லை...
கிடைக்கும் போது  அன்பின் மதிப்பு தெரிவதில்லை...
இழந்த அன்பிற்கு ஈடாக 
எந்த விலையும்  இல்லை...

*மூடிய வளைவரைகள் கணக்கில் அழகு...
சொர்க்கத்தில் சேராவிட்டாலும் 
சொல்லாத காதல் சுகமான சுமை தான்...



*முக்கோனவியல்தான் கணக்கின் முக்கிய ஒரு பகுதி...
முக்கோணக் காதல் இல்லாத கதை 
திரைப்படத்தில் வெற்றி இல்லை...

*விடை தெரியாத பல கனக்குகள் இன்றும் உண்டு...
விடை தெரியாத பல கேள்விகள் 
பிரிந்த காதலில் உண்டு...

*கணக்கு புரியாமல் படிப்பை இழந்தவர்கள் நிறைய பேர்...
காதல் புரியாமல் வாழ்கையை  தொலைத்தவர்கள்  நிறைய பேர்...

*கணக்கு கஷ்டம் தான்...
ஆனால்  அறிவின் முழுமை...

உண்மைக் காதலும் தேன்கூடு  போலதான்...
வாழ்ககையின் முழுமை...

*கணக்குதான் அறிவியலின் அரசி...
காதல் இல்லாமல் வாழ்ககையா ?...
நீ கொஞ்சம்  மாத்தி  யோசி...


*கஷ்டப்பட்டும்  இஷ்டப்பட்டும் படித்தால் தான் கணக்கு வரும்...
இஷ்டப்பட்டும்  கஷ்டப்பட்டால் தான் காதல் கைகூடும்...

*கணக்கும் காதலும் ஒன்றுதான்...
சிலருக்குதான் வரும்...
பலருக்கு வருவதே இல்லை...


*கணக்கும் காதலும் அபூர்வமானது...
மிகச்  சிலருக்கு தான் புரிகிறது...
பலருக்கு புரிவதே இல்லை...


Friday 21 August 2015

RATHINAM SUBRAMANIAN...

இரத்தினம் சுப்பிரமணியன்...



*பாரதிக்கு கணக்கு பிணக்கு ஆமணக்கு...
*இவரிடம் படித்தாலோ  சொல்வார் ...
கணக்கு கல்கண்டு பஞ்சாமிர்தம்...

*ஆண்டுக்கு ஆண்டு இவரின் தேர்ச்சி  நூற்றுக்கு நூறு...
இவரிடம் பயின்ற மாணவர்கள் நிறைய வாங்கியிருக்கிறார்கள் 
இருநூறுக்கு  இருநூறு...


*கணித துறையின்  தல...
கணக்கு இவருக்கு கை வந்த கலை...

*பிரம்பை எடுக்காமலேயே மாணவர்கள் 
நரம்பை நாடி பிடிக்கும் மருத்துவர் இவர்...

*கூட்டினாலும்  கழித்தாலும்  மாறாத  மாறிலி...
இவர் புகழ் மட்டும் "மாறி"க்கொண்டேயிருக்கும்...
 வருடா  வருடம் ஏறிக்கொண்டேயிருக்கும்...

*மாணவர்களிடம் இவருக்கு தான் முதல் .இடம்..
 இவருடைய மதிப்பு  + infinity  மட்டுமல்ல...
மேல... அதுக்கும் மேல...

*இவரிடம் படித்து கணக்கில் தோல்வி பெற்றவன் 
வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது...

*அலுவலகத்திலும் இருப்பார்...
ஆய்வுகூடத்திலும் இருப்பார்...
தூணிலும் துரும்பிலும் மட்டுமல்ல...
எங்கள் பள்ளியின்  PG  தூண்...

*தலைமைக்கு இவர்தான் வலதுகரம்...
இவரால்  தலைமைக்கு இல்லை தலைவலி... கலவரம்...

*கணக்கு  பிடிக்காதவர்களுக்கும் பிடித்த 
கணக்கு பிள்ளை இவர்...

*இவருடைய   அன்பு தான் எல்லோருக்கும் பலம்...
ஆனால்  இவருக்கோ அன்பு தான் பலவீனம்...


*அணிகளை தரம் பிரித்து விளக்குவதில்  திருத்தணி...
அண்ணாமலைக்கே பாடம்  போதிப்போர்  இந்த சுவாமிமலை ...
  பஞ்சாமிர்தமாய்  கணக்கை புகட்டுவதில் பழநி...
அறுபடை வீடு அருளும் பெற்ற .பழமுதிர்சோலை..
புகழின்  உச்சியில் திருபரங்குன்றம்....
அலைகடலென மாணவர்களின் அன்பு பிடியில் திருச்செந்தூர் ...




*சுருங்க சொன்னால் சுக்குக்கு மிஞ்சிய சித்த  மருந்தும் இல்லை...
எங்கள் சுப்பிரமணியத்தை மிஞ்சிய கணித ஆசிரியரும் இல்லை...





Wednesday 29 July 2015

A.P.J. ABDUL KALAM....

  *கனவு காணுங்கள் !
   இனி எல்லோரும்  கலாம்  ஆக
   கனவு காணுங்கள்...

* கவி  எழுத்தாளன்  மெய்ஞானி  விஞ்ஞானி  ஆசிரியன் ... 
    நீ சகலகலா வல்லவன்...
    அரசியல் செய்யாத நல்லவன்...

 *செய்திதாள் விற்று நீ படித்தாய்....
   இன்று உலக தலைப்பு செய்தியானாய்...
Photo Gallery
*கடைசிவரையிலும் ஆசிரியராய்  ..இருந்தாய்..
  உன் ஆசைப்படி  மாணவர்கள்  மத்தியில் மறைந்தாய்...
  உன் பிறப்பும் இறப்பும் சரித்திரம்...

*இந்தியா தான் உன் குடும்பம்....
  மாணவர்கள் தான் உன் உலகம்....
  
*நீ எங்களின் இன்னொரு தேசப்பிதா ...
   மக்கள் ஜனாதிபதி...
   உருவ வழிபாட்டில்  நம்பிக்கை உனக்கு 
   இல்லாவிட்டாலும்  நீயும் எங்கள்  தெய்வம்...

*தென்கோடியில் பிறந்தாய்...
  தலைநகரில் முதல் குடிமகனாய் உயர்ந்தாய்...
  முதல் குடிமகன்களில் நீதான் முதல்தரம்...
  அதிர்ஷ்டத்தை நம்பாத 
  அக்னிசிறகு நீ...

                                                  

*உழைத்தால் நிச்சயம் உயரலாம்...
    நேர்மையாய் இருந்தால் மதிக்கப்படலாம்...
    எந்த வயதிலும் சுறுசுறுப்பாய் இருக்கலாம்...
   தாய்மொழியில் படித்தால் முன்னேறலாம்...
    நீதான் உதாரணம் கலாம்...

* பொக்ரான்  வெடிகுண்டு வெடித்தாலும் 
    நீ பறக்க வைத்தாய் வெள்ளைப்புறா...
    ஏவுகணையில் கூட நீ பூக்கூடை வைக்க .விரும்பினாய்..

                                             
    
*ஊழல் இல்லாத இந்தியா...
  நதிகள் இணைந்த நாடு...
  உலக நல்லரசு... வல்லரசு...
  இந்தியா 2020...
   உன் கனவு தான்  இனி எல்லோரின் கனவு...

*கலாம்...உனக்கு சலாம்...
  உன்னை மனதில் வைக்கும் 
எல்லோரும் சாதிக்கலாம்...
    


    
    
   
  

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...