Friday 21 August 2015

RATHINAM SUBRAMANIAN...

இரத்தினம் சுப்பிரமணியன்...



*பாரதிக்கு கணக்கு பிணக்கு ஆமணக்கு...
*இவரிடம் படித்தாலோ  சொல்வார் ...
கணக்கு கல்கண்டு பஞ்சாமிர்தம்...

*ஆண்டுக்கு ஆண்டு இவரின் தேர்ச்சி  நூற்றுக்கு நூறு...
இவரிடம் பயின்ற மாணவர்கள் நிறைய வாங்கியிருக்கிறார்கள் 
இருநூறுக்கு  இருநூறு...


*கணித துறையின்  தல...
கணக்கு இவருக்கு கை வந்த கலை...

*பிரம்பை எடுக்காமலேயே மாணவர்கள் 
நரம்பை நாடி பிடிக்கும் மருத்துவர் இவர்...

*கூட்டினாலும்  கழித்தாலும்  மாறாத  மாறிலி...
இவர் புகழ் மட்டும் "மாறி"க்கொண்டேயிருக்கும்...
 வருடா  வருடம் ஏறிக்கொண்டேயிருக்கும்...

*மாணவர்களிடம் இவருக்கு தான் முதல் .இடம்..
 இவருடைய மதிப்பு  + infinity  மட்டுமல்ல...
மேல... அதுக்கும் மேல...

*இவரிடம் படித்து கணக்கில் தோல்வி பெற்றவன் 
வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது...

*அலுவலகத்திலும் இருப்பார்...
ஆய்வுகூடத்திலும் இருப்பார்...
தூணிலும் துரும்பிலும் மட்டுமல்ல...
எங்கள் பள்ளியின்  PG  தூண்...

*தலைமைக்கு இவர்தான் வலதுகரம்...
இவரால்  தலைமைக்கு இல்லை தலைவலி... கலவரம்...

*கணக்கு  பிடிக்காதவர்களுக்கும் பிடித்த 
கணக்கு பிள்ளை இவர்...

*இவருடைய   அன்பு தான் எல்லோருக்கும் பலம்...
ஆனால்  இவருக்கோ அன்பு தான் பலவீனம்...


*அணிகளை தரம் பிரித்து விளக்குவதில்  திருத்தணி...
அண்ணாமலைக்கே பாடம்  போதிப்போர்  இந்த சுவாமிமலை ...
  பஞ்சாமிர்தமாய்  கணக்கை புகட்டுவதில் பழநி...
அறுபடை வீடு அருளும் பெற்ற .பழமுதிர்சோலை..
புகழின்  உச்சியில் திருபரங்குன்றம்....
அலைகடலென மாணவர்களின் அன்பு பிடியில் திருச்செந்தூர் ...




*சுருங்க சொன்னால் சுக்குக்கு மிஞ்சிய சித்த  மருந்தும் இல்லை...
எங்கள் சுப்பிரமணியத்தை மிஞ்சிய கணித ஆசிரியரும் இல்லை...





NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...