Monday 10 October 2016

ENNAIP PATRI....

என்னைப் பற்றி...


** உணர்ச்சியை விற்று வாழ்பவர்க்கிடையில் 
உணர்ச்சியைக் கொன்று வாழ்ந்து கொண்டிருப்பவன்...

**நேசிக்கத் தெரிந்தவன்...
அதனையே யாசிக்கக் கூசுபவன்...

**ரோஜாவை மட்டுமல்ல...
அதன் முட்களையும் 
முத்தமிடத் தெரிந்தவன்...

**வார்த்தைகளால் காயப்படுத்துபவர்களையும் 
மௌனத்தால் சமாதானம் செய்பவன்...

**உண்மைகளுக்கிடையில்தான் 
எப்போதாவது பொய்களைப்  பேசுபவன்...

**வார்த்தைகளுக்காகவும்...வாக்குக்காகவும்..
வாய்ப்புகளை...வாழ்க்கையை...இழந்தவன்...

*ஆசையை அழிக்கத் தெரியாவிட்டாலும் 
நிறையவே அடக்கத் தெரிந்தவன்...

**காதலில்கூட காத்திருக்கவைத்தலை 
விரும்பாதவன்...


**நம்பிக்கை வைத்தவர்களுக்கு 
துரோகம் நினைக்காதவன்...
  மன்னிப்பவன்...எதையுமே மறக்காதவன்...

**வாழ்க்கையெனும் மேடையில் தவறுகள் 
செய்ய நிறையவே வாய்ப்புகள் கிடைத்தும்...
இன்னும் நல்லவனாகவே 
நடித்துக்கொண்டிருப்பவன்...

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...