Tuesday 8 September 2015

kanakum...kathalum...

*கணக்கும் காதலும் ஒன்றுதான்...
*பிரிக்க முடியாத புள்ளியின் 
தொடக்கம்தான் கணக்கு...


இறக்கும் வரையில் மறக்க முடியாத 
முதல் சந்திப்பில் இருந்து தொடங்குகிறது காதல்.

*எண்ணிலிருந்து  தொடங்குகிறது கணக்கு...
கண்ணிலிருந்து தொடங்குகிறது காதல்...



*முடிவிலிப் புள்ளியில் இணைகோடுகள் 
சந்திக்கின்றன சொல்கிறது கணக்கு...
வாழ்க்கை  முடிவதற்குள் முதல் 
காதலியை சந்திக்க துடிக்கிறது மனசு...

*கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் 
இல்லாமல் கணக்கில்லை...
சந்திப்புகளை கூட்டுதல் பேசிக் கழித்தல் 
மகிழ்ச்சியை பெருக்குதல் வருங்காலத்தை 
வகுத்தல் காதலில் உண்டு...

விதியில் தீர்க்கபடுகிறது  கணக்கு...
சதியால் பிரிக்கப்பட்டு 
விதிப்படி இணைவோம் எனும் 
நம்பிக்கையில் வாழ்கிறது காதல்...

 *கடைசி எண்  கணக்கில் இல்லை...
இறுதி மதிப்புக்கு எல்லையும் இல்லை...
கிடைக்கும் போது  அன்பின் மதிப்பு தெரிவதில்லை...
இழந்த அன்பிற்கு ஈடாக 
எந்த விலையும்  இல்லை...

*மூடிய வளைவரைகள் கணக்கில் அழகு...
சொர்க்கத்தில் சேராவிட்டாலும் 
சொல்லாத காதல் சுகமான சுமை தான்...



*முக்கோனவியல்தான் கணக்கின் முக்கிய ஒரு பகுதி...
முக்கோணக் காதல் இல்லாத கதை 
திரைப்படத்தில் வெற்றி இல்லை...

*விடை தெரியாத பல கனக்குகள் இன்றும் உண்டு...
விடை தெரியாத பல கேள்விகள் 
பிரிந்த காதலில் உண்டு...

*கணக்கு புரியாமல் படிப்பை இழந்தவர்கள் நிறைய பேர்...
காதல் புரியாமல் வாழ்கையை  தொலைத்தவர்கள்  நிறைய பேர்...

*கணக்கு கஷ்டம் தான்...
ஆனால்  அறிவின் முழுமை...

உண்மைக் காதலும் தேன்கூடு  போலதான்...
வாழ்ககையின் முழுமை...

*கணக்குதான் அறிவியலின் அரசி...
காதல் இல்லாமல் வாழ்ககையா ?...
நீ கொஞ்சம்  மாத்தி  யோசி...


*கஷ்டப்பட்டும்  இஷ்டப்பட்டும் படித்தால் தான் கணக்கு வரும்...
இஷ்டப்பட்டும்  கஷ்டப்பட்டால் தான் காதல் கைகூடும்...

*கணக்கும் காதலும் ஒன்றுதான்...
சிலருக்குதான் வரும்...
பலருக்கு வருவதே இல்லை...


*கணக்கும் காதலும் அபூர்வமானது...
மிகச்  சிலருக்கு தான் புரிகிறது...
பலருக்கு புரிவதே இல்லை...


NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...