Saturday 22 April 2017

AMMA...

அம்மா!!!...
1

**எத்தனை 
ஜென்மம் 
எடுத்தாலும் 
உன் அன்பின் 
அசலை 
அடைக்கவே 
முடியாது....
அம்மா!!!... 

2

**ஆயிரம்  
செல்வங்கள்
 சேர்த்தாலும்  
ஒழுக்கம் 
 எனக்கு நீ 
தந்த  
பெருஞ்செல்வம்  
அம்மா!!!... 

3
**எத்தனை 
சாமிகள் 
இருந்தாலும்...
அத்தனையிலும் 
குலசாமியாய் 
நீயே 
தெரிகிறாய்!!!...
அம்மா!!!...



4
**நீ இல்லாத 
போதுதான் 
உன் அருமை 
தெரிகிறது 
அம்மா!!!...

5

**எத்தனை 
பிறவி 
எடுத்தாலும் 
அத்தனையிலும் 
நீ 
வேண்டும் 
அம்மா!!!...


6

**பட்டினத்தார் 
மட்டுமல்ல...
காமராசரும் 
துறக்க 
முடியாத 
துறவு 
அம்மா!!!...

7
**உன் 
பொறுமை!!!...
சகிப்புத்தன்மை!!!...
குடும்பம் 
சிதையாமல் 
இருக்கிறது 
அம்மா!!!...


8

**இன்னுமொன்று...
விலைகொடுத்து
நான் 
வாழ்க்கையில் 
வாங்கமுடியாதது!!!...
உன் அன்பு
 மட்டும்தான்...
அம்மா!!...

9
**காதல் .மட்டுமல்ல..
கவிஞனின் 
தீராத 
கருப்பொருள் 
அம்மா!!!...

10

**மகனை 
மட்டுமல்ல....
அப்பாவின் 
துரோகத்தையும் 
மன்னிக்கும் 
மனது!!!...
அம்மா!!!

11

**மிச்சம் 
வைக்காமல் 
சாப்பிட 
சொல்லிவிட்டு...
மிச்சத்தை 
மட்டுமே 
சாப்பிடுவாள்!!!...
அம்மா!!!... 

12


**நரகத்தில் 
தவிக்கவிட்டு....
சொர்கம் 
போய்விட்டாய் !!!
அம்மா!!!

13

**வருடங்கள் 
போனாலும்...
என் 
மூச்சுக்காற்றில் 
உன் 
சுவாசம் 
மிச்சமிருக்கிறது!!!...
அம்மா!!!

14

**அடுத்த 
பிறவியிலாவது 
உன்னை 
கருவாய் 
சுமக்கவேண்டும்!!!
அம்மா!!!

15

 **கைரேகை 
மட்டுமல்ல!!!...
கால்ரேகையும் 
தேய்ந்து...
என்னை 
கையெழுத்திட 
வைத்தாய்!!!
அம்மா!!!

16

**எத்தனை 
தோசை 
வேண்டும்?
கேட்பாள் 
மனைவி!!!...
சின்ன தோசைதான்...
இன்னொன்று 
சாப்பிடு!!!...
கேட்காமலேயே 
வைப்பாள்!!!
அம்மா!!!...

17



**உயிர்...
மெய்...
உயிர்மெய்...
அம்மா!!!...
நீ 
இல்லாமல் நான் 
உயிர் இல்லா 
மெய்தான்...
அம்மா!!!...

18

**நிசமாய்
இருந்த நீ...
நினைவாய் 
மாறிப்போனாய் !!!...
இன்று...
அம்மா... 


Monday 17 April 2017

KANAVU KANUNGAL...

1

சிரிப்பு...
அழுகைபோல...
கனவும்
மனிதனுக்கானது!!!...
கனவு காணுங்கள்!!!...

கனவு மட்டுமே காணாதீர்கள்!!!...

2

பலிக்கும் எனும் 
நம்பிக்கை இருந்தால்...
அதிகாலை கனவல்ல!!!...
பகல் கனவும் பலிக்கும்!!!...
கனவு காணுங்கள்!!!


3


உன் லட்சியம்
உன்னை தூங்கவிடாமல்
வைத்திருந்தால்...
அதுதான் கனவு!!!...
கனவு காணுங்கள்!!!...

4

நீ காணும்
கனவை விட...
யாரோ ஒருவருக்கு
நீ கனவாய்
இருந்தால்
நீ அதிர்ஷ்டசாலி!!!...

5


அந்தந்த வயதில்...
நீ காணும் கனவு...
அந்தந்த வயதில்
நிஜமானால்...
நீ அதிர்ஷ்டசாலி!!!......

6

கனவுகள் தாண்டி...
கிடைக்கும் வாழ்க்கை
மிகப்  பெரிய போதை...
கடந்து போனவர்களைவிட
அழிந்துபோனவர்களே அதிகம்!!!...

7


காதலியைப் பற்றிய
கனவைவிட...
மனைவிக்கான
கனவு நிஜமானால்...
ஆணுக்கு
வாழ்க்கை  சொர்கம்!!!...

8


நீ என் கனவு!!!...
பலிக்கவேண்டும்!!!...
இல்லையென்றாலும்...
இனி
உன் கனவுதான்
என் கனவு!!!...

9


கண் தானம்
செய்யும்போது...
பார்வையை மட்டுமல்ல!!!...
கனவு காணும்
உரிமையையும்
தருகிறோம்!!!...
கண் தானம் செய்வோம்!!!...

10

கனவு என்பது உரிமை!!!...
ஒவ்வொவருவருக்கும்
வேறு... வேறு... கனவு உண்டு!!!...
உங்கள் கனவை
மற்றொருவர் மீது
திணிக்காதீர்கள்!!!...

11


சிலருக்கு
மட்டுமே
கனவு நனவாகிறது!!!...
பலருக்கு
கனவு
கனவாகவே போகிறது!!!...

12


நிறைவேறாத 
கனவின்வலியைவிட...
பாதி மட்டுமே...
பலிக்கும்
கனவின் வலி...
கொடுமையானது!!!...

13


கருப்பு... வெள்ளை...
வாழ்க்கையில்
இன்னும்
வண்ணமாய்
மிச்சமிருப்பவை
கனவுகள் மட்டுமே!!!..

14.


நிரந்தரமில்லை...
என்றாலும்!!!...
வானவில்லையும்
தாண்டிய...
வண்ணங்களைத்
தருகிறது...
கனவுகள்!!!...

15


தனக்கான
கனவு வாழ்க்கையை
வாழவேண்டும்...
நினைக்கும்போது
பலருக்கு
வாழ்க்கையே
கனவாய்
முடிந்துவிடுகிறது!!!...

16


கிடைக்கவில்லை...
என்றாலும்...
சில கனவுகள்...
சுகமானவை!!!...

17


கனவிலும் நினைக்காத...
காதல்!!!...
துரோகமாகும்போது...
நிஜம்
கனவை விட
கொடுமையானது!!!...

18


கனவுக்கவிதையை...
இரவில்வடித்து...
காலையில்...
காணாமல் தேடும்...
கவிஞனின்  வலி
சுகமானது!!!...

19


எத்தனையோ பேர்...
முதல்வர்
கனவில் இருந்தாலும்...
காமராஜரைத்தவிர...
யாரையும்...
முதல்வராக
ஏற்றுக்கொள்ளவில்லை...
கனவு!!!...

20



கனவும்...காதலும்...
ஒன்றுதான்!!!...
சிலருக்கு
கனவு
காதலாய் கைகூடுகிறது!!!...
பலருக்கு
காதலே
கனவாய் போய்விடுகிறது!!!...


NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...