Tuesday 28 June 2016

AVAL PEYAR...

அவள் பெயர்...

 

*என்னைச் சுற்றி எல்லாமே உன் நிகழ்வுகள் தான்...

*சாலையில் நிறைய பெயர்ப் பலகைகள் 
உன் வடிவங்களில் என் நினைவைத் திருப்பும்...

*எதிரே வரும் வாகனங்களில் நீ அவ்வப்போது 
வேகமாய் என்னைக் கடந்து போவாய்...
என் காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழலும்...

*தெய்வத்தின் முன் பிரார்த்தனை செய்து பின் 
கண் திறக்கையில் எதிரிலேயே உன் தரிசனம் தருவாய்...
என்னைக் கடவுளாய் நீ மதித்த நினைவுகளெல்லாம் 
என்னுள் நிஜமாய் மலரும்...

*செய்தித் தாள்களின் நிறைய விளம்பரங்களில் 
நீ தென்படுவாய்...
என் முன்னால் நீ சிரித்து  விளையாடியநிகழ்வுகளெல்லாம் 
கண்ணீராய்க் கரையும்...

*வானொலியின் அலைவரிசைகளில் நீ 
நிறையதடவைகள் என்னால் கேட்கப்பட்டிருக்கிறாய்...
என்னோடு நீ பேசிய அத்தனை 
வார்த்தைகளையும் என் மனம் 
மறு ஒலிபரப்பு செய்யும்...

*திரை அரங்கத்தில்...தொலைக்காட்சியில் ...
நிறையக் காட்சிகளில் உன் அடையாளங்கள்...
என் கண் முன்னால் நீ நடமாடிய நாட்களெல்லாம் 
என்னுள் காட்சியாய்  விரியும்...

*பேருந்து நிலையத்தில்... பொது இடங்களில்...
காத்திருக்கும் வேளைகளில் எத்தனையோ முறை நீதான் என் 
அதிர்ஷ்டமென்று முன்னால் நீட்டப்பட்டிருக்கிறாய்...
உன்னை மறுத்த நாட்களெல்லாம் என்னைத் தொடர்ந்து .வரும்...

*வாசிக்கும் புத்தகங்கள்...எழுதும் நோட்டுகள்...அழைக்கும் குரல்கள்...
விளம்பரப் பலகைகள்...நீ அடிக்கடி தென்படுகிறாய்...
உன்னை மறந்துபோக நினைத்தாலும் என்னையே 
பார்த்துக் கொண்டிருந்த உன் கண்கள் கண்ணீராகும்...

*திருமண நிகழ்சிகளில் மணமகளின் வடிவாக 
உன்னை யாராவது சொல்வார்கள்...
நீ என்னிடம் கேட்ட அத்தனை ஆசைகள்...கனவுகள்...
மறுபடி மறுபடி வந்து போகும்...

*உன்னைவிட்டு விலக...மறக்க...பிரிய...அவ்வப்போது 
எண்ணங்கள் வந்துபோகும்...
இயற்கையின் சதியா! கடவுளின் சாபமா!
என்னைச் சுற்றி நடக்கும் எல்லா 
நிகழ்வுகளும் உன்னைத்தான் நினைவுபடுத்துகின்றன....







Tuesday 21 June 2016

22-06-1974

22-06-1974


*நடிகையெனில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியையே 
ஒவ்வொரு வருடமும் அணைத்து 
வயதை வயதை மறைத்துக் கொண்டாடலாம்...

*தயாரிப்பாளரின் செலவிலேயே அனைவரையும் 
குளிப்பாட்டலாம்... சந்தோஷப்படுத்தலாம்...

*நடிகனெனில் நற்பணிக்கு ரசிகர்களை 
பயன்படுத்தலாம்...ரத்ததான முகாம் 
நாடெங்கும் நடத்தலாம்...


*திரைப்படமொன்றை வெளியிடச்செய்து 
பாலாபிஷேகம் செய்யலாம்...
அடுத்த வருடமே அரசியலுக்கு வருவேன்...
பன்ச் வசனம் பேசி அடுத்த முதல்வர் ஆகலாம்...

*அரசியல்வாதி அவர்களுக்காக
 மண்சோறு... ஆயிரம் ஜோடி திருமணம் நடத்தலாம்...
அங்கப்பிரதட்சணம் செய்ய சொல்லலாம்...

*மக்களின் வரிப்பணத்திலேயே அரசுத் திட்டம்
தொடங்கலாம்...அன்புப்  பரிசுகள்...
அன்பளிப்புகள் சேகரிக்கலாம்...

*மரத்தை மட்டும் நட்டுவிட்டு 
மற்றவர்களை தண்ணீர்விடச் செய்யலாம்...

*தீ மிதிக்கச் சொல்லிவிட்டு இது 
காட்டுமிராண்டித்தனம்...அறிக்கையும் விடலாம்...

*எதிர்கட்சிச் தலைவர் வறுமை ஒழிப்பு நாள்...
நலத்திட்டம் வழங்கலாம்...
வானம்பாடிகள் வந்தன...
காக்கைகள் ஓடிப்போய்விட்டன...
வசனம் படிக்கலாம்...

*திடீர் வளர்ப்பு மகன் புழல் சிறைக்கு 
ஆன்மிகப்பயணம் செல்லலாம்...


*  முன்னாள் தலைவர்கள் 
தன்னுடைய இருப்பை சுவரொட்டிகளில் சிரித்து 
மக்களிடம் காட்டலாம்...

*வியாபாரிகள் இந்த நாளையும் 
தள்ளுபடி விளம்பரத்தில் 
தந்திரமாய் பணம் சேர்க்கலாம்...


*பணக்காரர்களுக்கு இன்று மட்டும் 
தர்ம சிந்தனை தோன்றலாம்....
அனாதை இல்லம்...அன்னதானம் அமர்களப்படுத்தலாம்...

*தூண்டுவிழும் பட்ஜெட்டுக்கு 
குடும்பத்தலைவர் யோசிக்கலாம்...

*வசந்தமோ!வருத்தமோ!
வருடத்துக்கு ஒருமுறை தான்...

*வலியில் தான் என் வாழ்க்கை...

*என்பிலதனை வெயிலில் காய்கிறேன்...

*இரவினில் இறந்து...பகலில் பிறந்து...
இறந்து பிறந்து இறக்கிறேன்...

*எனக்கு மட்டும் உயிரோடு இருக்கும் 
ஒவ்வொரு நாளுமே என் பிறந்த நாள் தான்...








Tuesday 7 June 2016

PHENIX...

பீனிக்ஸ்...


*உன் நினைவுத் தீ என்னுள்
 எரிந்து கொண்டே இருக்கிறது.. 
அதில் நான் கொஞ்சம் கொஞ்சமாய்
 சிதைந்துக் கொண்டே இருக்கிறேன்... 

*தினம் நான் தலைக்கு 
நீர் ஊற்றும் போது கூட 
உன் நினைவுத் தீ
 கொழுந்துவிட்டு எரியும்...
அதில் என் உயிர் 
எரிந்து கொண்டே கரையும்...

*இரவுப் பொழுதுகள்
 எனக்கு நரகங்கள்...
ஒவ்வொரு நாளுமே
 இரவினில் நான் இறக்கிறேன்...
மறுநாள் மீண்டும்
 இறப்பதற்காகப் பிறக்கிறேன்...

*என் வாழ்க்கை 
அர்த்தமற்று போய்விட்டது...
இன்னும் என்னுள் உன் வலிகள் 
மட்டுமே மிச்சமிருக்கிறது...

*என் இதயம் எப்போதும் 
வலித்துக் கொண்டே இருக்கிறது...
அதில் உன் உயிர் விடுதலை தேடி 
துடித்துக் கொண்டே இருக்கிறது...

*என் நடிப்பைக் கூட
 உன்னால் சகித்துக் கொள்ள முடியும்...
என் காதல் தெரியாது உனக்கு!
அதன் வலி(மை)யை 
உன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது...

*என்னைப் பொறுத்தவரை 
என் எதிர்காலம் என்பது 
நம்முடைய இறந்தகாலம் மட்டும்தான்...

*ஒரு உயிரின் விலை 
காதல்தான் என்பது அதன் 
உன்னதமும்...வலியும்...
உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்...

*காதலும் நிஜம்...மரணமும் நிஜம்...
காதலில் வரும் மரணமும் நிஜம் தான்...

*உன் நலமும் சந்தோஷமும் 
மட்டும்தான் என் வாழ்க்கை...
அதற்காக மட்டும்தான் தினமும் 
நான் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறேன்...

*எனக்கு குடிப்பழக்கமில்லை...
நான் புகைப் பிடிப்பதுமில்லை.
ஆனாலும் என் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது...

*என் திருமணமென்பது 
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை...
ஆனால் என் மரணம் மட்டும் நம் 
காதலில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது...

*இறக்கும் வரம்...மறக்கும் பலம்...
இறைவா! ஒன்று மட்டும் தா!

*உன் நினைவுத் தீ என்னுள்
 எரிந்து கொண்டே இருக்கிறது.. 
அதில் நான் கொஞ்சம் கொஞ்சமாய்
 சிதைந்துக் கொண்டே இருக்கிறேன்...



 


NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...