Saturday 17 December 2016

MATHANGALIL AVAL...

மாதங்களில் அவள்...



**மார்கழி முதல்
-நாளில் தொடங்குகிறாய்
மாக்கோலம்...
எந்த தை நாளில்
காணப்போகிறோம்?...
நம் மணக்கோலம்!...

**நீ போடும் ஒவ்வொரு
கோலத்திலும்
ஒளிந்திருக்கிறது!...
நீ என்னிடம் சொல்லாத
எனக்கான காதல்!...

**\எத்தனை புள்ளிகள்
கொடுத்தாலும்
கோலத்தில்
சிறைப்படுத்துகிறாய்!...
என்னை எப்போது
உன்னுள்
சிறைப்படுத்தப்போகிறாய்!...

**கோலத்தை முடித்துவிட்டு 
கூந்தலில் ஈரத்துண்டோடு 
நீ தலை சாய்த்துப்பார்க்கையில் 
எனக்கு குழப்பம் வரும்!...
எது அழகு கோலமென்று!...


**என் கோலத்தில் 
உனக்கு
எந்தக்கோலம் 
பிடிக்குமென்று 
கேட்கிறாய்?..
எனக்குப் பிடித்த 
ரங்கோலி நீயிருக்க 
நான் வேறென்ன 
சொல்வது?...

**ஒரு புள்ளியில் தொடங்கி 
அதே புள்ளியில் 
முடிகிறது கோலம்...
உன்னுள் தொடங்கி 
உன்னோடு 
முடிகிறது 
என் காதல்!...


**நீ போடும் கோலம் 
இன்றோ...நாளையோ...
அழிந்துவிடும்...
ஆனால் என்றுமே 
அழியாமல் இருக்கிறது!...
என் நெஞ்சில் 
உன் கோலம்...

**இப்போதும் நீ 
இல்லாத உன் 
தெருவில் 
நிறைய கோலங்கள்...
எந்த கோலத்தையும் 
பிடிக்கவில்லை...


**கோலமும்...வாழ்க்கையும்...
ஒன்றுதான்...
புள்ளிகளை 
சரியாக இணைக்காவிட்டால் 
அலங்கோலமாகிவிடுகிறது!...
 
**காதலும்...கோலமும்...
ஒன்றுதான்...
அழிக்க மட்டும் 
மனம் வருவதேயில்லை....


NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...