Friday 19 May 2017

நிறமதிகாரம் ...


1

கருப்பு...
குறையல்ல!!!...
திராவிடம்!!!...
அடையாளம்!!!...
வெள்ளை...
நிறமல்ல!!!...
குறைபாடு!!!...

2

இங்கு...
கருப்பு முடிக்கு 
வெள்ளையடிக்காமல்...
வெள்ளையை
கறுப்பாக்குபவர்களே 
அதிகம்!!!...


3

விழிகள்...
மட்டுமல்ல!!!...
கண்ணுக்கும் 
கருப்பு மை தான் 
அழகு!!!...

4

தாயின் கருவறை!!!...
கோவில் கருவறை!!!
இரண்டுமே கருப்புதான்!!!...
புனிதமானவை!!!...
வணங்கத்தக்கவை!!!...


5

வெள்ளையாய்
இருப்பவன்கூட
பொய்ச்சொல்வான்!!!...
கருப்பாய் இருப்பவனுக்கு
எதிர்ப்புசக்தி அதிகம்!!!...
ஆயுள் அதிகம்!!!...


6

ஓவியனுக்கு மட்டுமல்ல!!!...
புகைப்படக்காரருக்கும்
பிடித்த நிறம் கருப்பு!!!...

7

கருப்பு எனக்கு
மிகவும் பிடிக்கும்!!!...
என்னை...
முதன்முதலாய்...
உண்மையாய்
நேசித்தபெண் கருப்பு!!!...

8

நிறத்தில் என்ன
இருக்கிறது!!!...
ரோஜா கருப்பாய்
இருந்தாலும்...
அதிலும் வாசம் வரும்!!!...


9

புகைப்படங்களில்கூட...
கருப்பு வெள்ளை...
மங்காதவை!!!
பொக்கிஷமானவை!!!

10

பழுப்பு நிலக்கரி!!!...
கருப்புதான்!!!...
ஆனால்...
மின்சாரம்...
உலகத்தையே
வெளிச்சமாக்குகிறது!!!...

11

கணக்கு தராவிட்டால்...
சேமித்த பணம்கூட
கருப்பாகிவிடும்!!!...
உண்மைதான்
கருப்பு!!!...


12

காமராஜர்!!!...
லிங்கன்!!!..
மண்டேலா!!!...
நிறங்களைத்தாண்டி...
மனங்களை
வென்றவர்கள்!!!

13

கருப்பு
கரிக்குள் வைரமுண்டு!!!...
யானைக்குள்...
வெள்ளை தந்தமுண்டு!!!...
இனிப்பைத் தரும் கரும்பு!!!
கருப்பு...
இனிப்பானது...
விலைமதிக்க முடியாதது!!!


14

கரும்பலகையில்
வெள்ளை கட்டியை
கொண்டு எழுதினால்தான்...
அறிவையே  தரமுடிகிறது!!!
இருட்டு நிரந்தரமில்லை...
விடியல் தூரமில்லை!!!...

15

சிலப்பதிகார
கண்ணகிகூட
கருப்புதான்!!!...
அவள் கற்புநெறி...
மதுரையே எரித்தது!!!...


16

கருப்பும்!!!...
வெள்ளையும்!!!...
இணைந்தால்தான்...
கண்ணுக்கு
காட்சியே...
கிடைக்கிறது!!!...

17

கருப்பு...
துக்கத்தின் அடையாளமல்ல!!!...
உள்ளத்து
உணர்ச்சிகளின்
வெளிப்பாடு!!!..
வெள்ளை..
சமாதானமல்ல!!!...
சிலநேரம்
அமங்கலத்தின்
அறிகுறி!!!...


18

கல்லில்
வடித்த கடவுள்!!!...
கன்னியர் தேடும்
கண்ணன்...
கருப்புதான்!!!...
வெறுக்க முடியுமா?!!!...

19

வெறுப்பைக் காட்டாத...
நெருப்பான...
பொறுப்பான...
பெண்ணே...
கருப்பாய்
இருந்தாலும்
விரும்பப்படுகிறாள்!!!...


20

அத்தனை
நிறங்களையும்
காட்டும்
வானவில்லே...
சொல்கிறது!!!...
நிறம்...
நிரந்தரமில்லையென்று!!!...

21

நிறம்...
மங்கிப்போகும்!!!...
நாளடைவில் 
மறைந்தும் போகும்!!!...
மனதிற்கும்...

மகிழ்ச்சிக்கும்...

நிறமில்லை!!!








Tuesday 2 May 2017

ROUTHIRAM PAZHAGU...




ரௌத்திரம் பழகு!!!...

1

கோபம்
இருக்கும் இடத்தில்...
குணம் இருக்குமா?...
தெரியவில்லை!!!...
ஆனால் கோபம்
 மிக மோசமான
குணம்!!!...

2

என்னுடைய
கோபத்தினால்...
வாழ்க்கையில்
நான்
இழந்த
பொறுமை நீ!!!...

3

என் கோபத்தினால்
நீதான்
அதிகம்
அழுதிருக்கிறாய்!!!...
ஆனால்
என் அன்பில்
அதையும்
தாண்டி
அழுதிருக்கிறாய்!!!...

4

குழந்தையின்
குறும்பில்
கோபப்படாதவனே!!!...
உண்மையில்
பொறுமைசாலி!!!...

5

கிடைக்காத...
நிராகரிக்கப்பட்ட...
அன்பின் வலி!!!...
இயலாமைதான்...
கோபம்!!!...

6

நமக்கு
மிகப்பிடித்தவர்களிடம்....
காட்டும்
அதிகபட்ச  அன்பின்
உரிமை...
கோபம்!!!...

7

உனக்கு
கோபமே
வரவில்லையென்றால்...
ஏதோ...
குறையிருக்கிறது!!!...
கோபமில்லா
மனிதன்...
அரை மனிதன்!!!...

8

தன் தவறை
மறைக்க...
எதிராளி மீது
நாம்
உபயோகிக்கும்
ஆயுதம்...
கோபம்!!!...

9

அதிக சந்தோஷத்தில்
மட்டுமல்ல!!!...
அதிக கோபத்தில்கூட...
தவறான முடிவுகள்தான்...
கிடைக்கின்றன!!!...

10

சிலவேளைகளில்
கோபம்
 தவிர்க்க முடியாதவை!!!...
தவிர்த்திருக்கலாமோ?...
பின்னால்
நினைப்பைத்  தருபவை!!!...

11


காதலியிடம்
வராத கோபம்....
காதலி
மனைவியானபின்
அடிக்கடி வருகிறது!!!...

12

என்னை என்
கோபத்தோடு
ஏற்றுக்கொண்ட
அனைவருமே
என் உறவுகள்!!!...
உணர்வுகள்!!!...

13

கோபப்பட்டு
சாதிக்கும்
மனைவியைவிட...
அழும் மனைவி...
சத்தமின்றி
சாதிக்கிறாள்!!!...

14

உணவில்
உப்பையும்...
உறவில்
கோபத்தையும்...
அளவோடு வைத்தால்
வளமாக வாழலாம்!!!...

15

புரிந்து
கொள்ளப்படும்
அன்பைவிட...
உணர்ந்து
கொள்ளப்படும்
கோபம்...
மிகவும்
 வலிமையானது!!!...

16

நான் மிகுந்த 
கோபக்காரன்!!!...
சொல்ல
வெட்கமாயிருக்கிறது!!!!...

17

கோபத்தில்
சொல்லும் வார்த்தைக்கு
எந்த மதிப்பும் இல்லை!!!...
சந்தோஷத்தில்
சொல்லாத வார்த்தைக்கு
எதைக் கொடுத்தாலும்
ஈடாகாது!!!...

18


கோபத்தின்
வார்த்தையைவிட....
அதுதரும்
வலிக்கு
ஆயுள்  அதிகம்!!!...



NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...