Sunday 18 June 2017

appa...

தாயுமானவன்...


1


**அப்பாவின்
கோபத்தில்...
அன்பு 
புரியுமானால்...
அப்பாவை 
மிகப்பிடிக்கும்!!!... 


2


**தன் வயதில் 
தனக்கு 
ஆசைப்பட்டு...
கிடைக்காததை எல்லாம்...
தன் மக்களுக்கு...
கிடைக்க 
பாடுபடுவார்...
அப்பா!!!


3


**உணவகத்துக்கு
செல்லும்போதுகூட...
எல்லோரும்
விரும்பியதைச்
சாப்பிட...
தான்
இட்லி மட்டுமே
சாப்பிடுவார்!!!...
அப்பா!!!...


4



**துணிக்கடையில்...
எல்லோருக்கும்
பிடித்ததை
வாங்கிக்கொடுத்துவிட்டு...
கைக்குட்டை வாங்கி...
கண் துடைத்துக்கொள்வார்!!!...
அப்பா!!!...


5

**அப்பாவின் 
தோளில் சவாரி 
பழகிவிட்டு...
சொந்தக்காலில் 
நிற்கும்போது 
தெரிகிறது!!!..
அவருக்கு 
எவ்வளவு 
வலிக்குமென்று!!!... 

6

**அப்பாவுக்கு 
பிடித்த 
மகனாய் இருக்கும் 
அதிர்ஷ்டம்...
எல்லா 
மகன்களுக்கும் 
கிடைப்பதில்லை!!!... 


7


**தன்னை 
தன் 
மகன் புரிந்துகொள்ளாத 
போதுதான்...
அப்பாவுக்கு...
தன்னுடைய 
 அப்பாவை மிகவும் 
பிடித்துப்போகிறது !!!... 

8


**சிறந்ததை 
 மட்டுமே தர 
ஆசைப்படும் 
தகப்பனிடம் 
பிடித்ததைத்தர 
புரியவையுங்கள்!!!...

புண்படுத்தாதீர்கள்!!!...

9


**அப்பாவின் 
கண்டிப்பின் 
அன்பு...
அப்பாவாகும்போதுதான்...
புரிகிறது!!!...

10


**சிறுவயதில்
தான் ஏக்கமாய்...
பார்த்ததை எல்லாம்...
தன் மகன்...மகளுக்கு ...
பாசத்தோடு...
பெருமிதத்தோடு...
வாங்கித்தருவார்!!!...
அப்பா!!!...

11

பாசம் மட்டுமே
இருப்பதுபோல்...
நடிக்கத் தெரியாத...
கோபமாய் மட்டும்
நடிக்கத் தெரிந்தவர்தான்...
அப்பா!!!...

12

வாழ்க்கையெனும்
திரைப்படத்தில்...
முதல் பாதியில்
வில்லனாகவும்...
இரண்டாம்பாதியில்
கதாநாயகனாகவும்...
மகனால்
உணரப்படுபவர்தான்...
அப்பா!!!...

No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...