Saturday 9 December 2017

naan+nee=naam...

நான்+நீ=நாம்!!!...


* நான் உந்தன் தண்ணீர்!!!...
எனக்கென்று தனியாய் 
நிறமில்லை!!!...
மணமில்லை !!!...
நீ விரும்பும் வடிவம் 
நான் எடுப்பேன்!!!...
உன் உயிர்தாகம் தீர்ப்பேன்!!!...
மழையாய் வருவேன்!!!...
 முழுதாய் நனைப்பேன்!!!...

*நான் உந்தன் நிலம்!!!...
உன் பார்வையின் 
நீளம்தான் என் எல்லை!!!...
வேறு யாரும் வசிக்க...
இங்கு இடம் இல்லை!!!...


*நான் உந்தன்  நெருப்பு!!!...
உன்னைச் சுற்றித்தான் 
எரிந்து கொண்டேயிருப்பேன்!!!...
எனை எரித்து மெழுகாய் 
உருகி ஒளி தருவேன்!!!...
நீ அணைத்தால் மட்டுமே 
கட்டுப்படுவேன்!!!...
எப்போதுமே நான் 
அணையாமல் உடனிருப்பேன்!!!...
உன்னை அணைத்தே 
உன்னோடு உயிர்விடுவேன்!!!...


*நான் உந்தன் காற்று !!!...
புயலாய் தாக்குவேன்!!!...
தென்றலாகவும் உன்னை 
தாலாட்டுவேன்!!!...
நீ சுவாசிக்க மட்டுமே 
நானிருப்பேன்!!!...
உன் மூச்சோடுதான் 
கலந்திருப்பேன்!!!...
நீ சுவாசிக்கவில்லையானால் 
உயிர்விடுவேன்!!!...

*நான் உந்தன் வானம்!!!...
நீ தொடும் தூரத்தில் 
நானிருப்பேன்!!!...
உன் சிறகின் 
எல்லையாய் நான் விரிவேன்!!!...
வானவில் மட்டுமல்ல!!!...
வாழ்வின் அத்தனை 
வண்ணங்களையும் தருவேன்!!!...

*நான் உன் கண்ணாடி!!!...
நீ அழும்போது கண்டிப்பாய் 
நான் சிரிக்கமாட்டேன்!!!
உனக்காக மட்டும்தான் விழுவேன்!!!...
எத்தனை துண்டுகளாய் 
வேண்டுமானாலும் 
நான் உடைவேன்!!!...


No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...